கனடாவுக்கு இந்தியா கண்டனம்
1 min read
India condemns Canada
4/12/2020
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த கனடாவுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று 9 -வது நாளாக போராட்டம் நடந்தது.
டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அவர் கடந்த 1-ந் தேதி , “இந்தியாவில் நடைபெற்றுவரும் விவசாயிகள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம். உரிமைகளை பாதுகாக்க அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களுக்கு கனடா எப்போதும் ஆதரவு அளிக்கும்.” என தெரிவித்திருந்தார்.
மேலும், கனடாவில் உள்ள் இந்திய தூதரகத்தில்
போராட்டங்களும் நடைபெற்றது.
கண்டனம்
இதனையடுத்து, கனடா பிரதமரின் கருத்துக்கும், தூதரகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கும் இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் எனவும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனடா பிரதமர் ட்ரூடோ தெரித்த கருத்துக்கு இந்திய அரசு முறைப்படி தூதரகம் வழியாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் உள்ள கனடா தூதரை அழைத்து மத்திய அரசு தனது அதிருப்தியை பதிவு செய்துள்ளது. மேலும், கனடா பிரதமரின் இதுபோன்ற கருத்துக்கள் இரு நாட்டு உறவையும் மிகக்கடுமையாக பாதிக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கனடா நாட்டு தலைவர்கள் இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும், கனடா தலைவர்கள் இது போன்ற கருத்துக்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தால் இருநாட்டு உறவிலும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.