அ.தி.மு.க., தி.மு.க. தவறுகளை ரஜனி கட்சி பேசாது; தமிழருவி மணியன் பேட்டி
1 min readRajani Party Don’t speek about AIADMK, DMK mistakes; Tamilruvi Maniyan interview
5/12/2020
அ.தி.மு.க., தி.மு.க.வின் தகறுகளை பேசமாட்டோம் என்றும் அதை பேசி மக்களிடம் ரஜினி கட்சி செல்லாது என்றும் தமிழருவி மணியன் கூறினார்.
ரஜினி ஆலோசனை
சென்னை போயஸ் கார்டனல் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் அவர் மக்கள் மன்ற மேற்பார்வையாளர் தமிழருவி மணியனுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாங்கள் கட்சிக்கு தேவையான அனைத்து அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். அடிப்படை கட்டமைப்பு குறித்து ஆழமாகவும், விரிவாகவும் ஆலோசித்து வருகிறோம்.
முதல்-அமைச்சர் வேட்பாளர் பற்றி ரஜினியோ, நாங்களோ தற்போது பேசவில்லை. முதல்வர் வேட்பாளர் பற்றி ரஜினி ஏற்கனவே பேசியது அப்படியே நிற்கிறது.
அ.தி.மு.க., தி.மு.க.
கட்சி தொடர்பான அனைத்து செய்திகளையும் ரஜினிகாந்த் அறிவிப்பார். கட்சியின் பெயர், சின்னம் உள்பட அனைத்தையும் ரஜினிகாந்த் தான் சொல்வார்.
மற்றவர்களை விமர்சித்து தனது கட்சியை வளர்க்காமல் ஆன்மிக அரசியலை முன்னெடுப்பார்.
தி.மு.க., அ.தி.மு.க.வின் தவறுகளை பேசி மக்களிடம் சென்று சேர வேண்டும் என நாங்கள் விரும்பவில்லை. ரஜினி கட்சியை தொடங்கியவுடன் பெரும்பாலான வாக்காளர்கள் ஆதரவு அளிப்பார்கள்.
ரஜினியால் தங்களுக்கு பாதிப்பில்லை என்று அரசியல் கட்சிகள் கூறிவருகிறது. அதுவே அவர்களுக்கு பாதிப்பு இருப்பதைத்தான் காட்டுகிறது.
மத அரசியல்
ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கும், மத அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
ரஜினியின் அரசியல் அன்புசார்ந்த ஆன்மிக அரசியல், மற்றவர்களை விமர்சிக்கும் அரசியல் அல்ல.
ஆன்மிக அரசியல் என்பதை முதலில் சொன்னவர் மகாத்மா காந்தி.
ரஜினி வந்ததும் வாக்காளர்கள் அவரை ஆட்சியில் அமர்த்துவதுதான் அதிசயம், அற்புதம். தமிழகத்தில் ஒரு பேரெழுச்சி ஏற்படும்.
ரஜினி கட்சி தொடங்கியவுடன் அதனுடன் காந்திய மக்கள் இயக்கம் இணைக்கப்படும்.
இவ்வாறு தமிழருவி மணியன் கூறினார்.