June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

சென்னையில் மின்சார ரெயில்களின் எண்ணிக்கை 7-ந் தேதி முதல் அதிகரிப்பு; பெண்கள் செல்லவும் அனுமதி

1 min read

The number of electric trains in Chennai will increase from the 7th

4/12/2020

சென்னை புறநகர் ரெயில்களின் ( மின்சார ரெயில்கள்) எண்ணிக்கை வருகிற 7-ந் தேதி முதல் அதிகரிக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறித்துள்ளது.

மின்சார ரெயில்கள்

கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை அடுத்து போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டன. ரெயில் சேவையும் நடைபெறவில்லை.

அதன்பின் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதில் முதலில் வெளியூர்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.

அதன்பின் சென்னையில் கடந்த மாதம் மின்சார ரெயில்கள் ( புறநகர் ரெயில் சேவை) அத்தியாவசிய பணியாளர்களும், பெண்களும் பயணிக்க மீண்டும் தொடங்கியது. தற்போது மின்சார ரெயில்கள் எண்ணிக்கை 244 ஆக உள்ளது.

அதிகரிப்பு

இந்த நிலையில் சென்னை புறநகர் ரெயில் சேவையின் ரெயில்களின் எண்ணிக்கை வருகிற 7-ந் தேதி முதல் 244ல் இருந்து 320ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும், அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் பெண்கள் தவிர மற்ற பெண்கள் காலை 7.00 முதல் 9.30 மணி வரையும், மாலை 4.30 முதல் 7.00 மணி வரையும் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.