June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,141 பேருக்கு கொரோனா; தென்காசியில் ஒருவர் சாவு

1 min read

Corona for 1,141 people in Tamil Nadu today; One death in Tenkasi

14/12/2020

தமிழகத்தில் இன்று 1,141 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தென்காசியில் ஒருவர் உள்பட மொத்தம் 14 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் 1200 பேருக்கும் குறைவாக கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரேனா பாதிப்பு நிலவரம் பற்றி இன்று மாலை தமிழக சுகாதார துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) மட்டும் 1,141 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கனின் மொத்த எண்ணிக்கை 8,00,029 ஆக உள்ளது.

டிஸ்சார்ஜ்

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1,203 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோர் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 78 ஆயிரத்து 81 ஆக உயர்வடைந்து உள்ளது.
சென்னையில் இன்று மேலும் 343 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,20,211 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது இன்று மட்டுமு் 14 பேர் கொரேனாவுக்கு இறந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,909 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமக தற்போது 10,039 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென்காசியல் ஒருவர் சாவு

நெல்லை மாவட்டத்தில் நேற்று மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்து 46 ஆக உயர்ந்தது.

மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 18 பேர் நேற்று குணமடைந்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 693 ஆக அதிகரித்தது. தற்போது 143 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இதுவரை 210 பேர் இறந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 56 வயதான ஆண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த 5-ந்தேதி தென்காசி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று புதிதாக 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 168 ஆக உயர்ந்தது. இதில் 7 ஆயிரத்து 976 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 36 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 156 பேர் இறந்துள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 14 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 867 ஆக உயர்ந்தது. இதில் 15 ஆயிரத்து 602 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர்.

தற்போது அரசு ஆஸ்பத்திரிகளில் 125 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 140 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்துள்ளனர்.

ஐ.ஐ.டி. மாணவர்கள்

சென்னை ஐஐடியில் 66 மாணவர்கள், 5 ஊழியர்கள் என 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை ஐ.ஐ.டி.யில் அனைத்து துறைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சென்னை ஐஐடி முடிவு செய்துள்ளது.

இதனைத்தொடர்ந்து சென்னை ஐஐடியில் படித்துவரும் ஆராய்ச்சி மாணவர்கள் ஆன்-லைன் வழியில் படிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை அனைத்து துறைகளும் செயல்பட கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.