தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்; ரஜினிக்கு விரைவில் சம்மன்
1 min read
Thoothukudi shooting incident; Rajini summoned soon
17/12/2020
தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த்துக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என்று விசாரணை ஆணையம் கூறியுள்ளது.
துப்பாக்கி சூடு
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கினை அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது இந்த சம்பவத்திற்கு சமூக விரோதிகளே காரணம் என்று கூறி இருந்தார். இதனால் ரஜினிக்கு ஆணையம் ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தது.
மீண்டும்..
இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிக்கு மீண்டும் விரைவில் சம்மன் அனுப்பப்படும் என்று ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் தகவல் தெரிவித்துள்ளார். இதன்படி ஜனவரி மாதம் விசாரணைக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆஜராகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.