கேரளாவில் கொரோனா பரவல் இன்னும் குறைவில்லை
1 min read
Corona spread in Kerala has not decreased yet
19/12/2020
கேரளாவில் இன்னும் கொரோனா பரவல் குறையவில்லை. இன்று மட்டும் 6,293 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளா
இந்தியாவில் முதன்முதலில் கேரளாவில் ஒரு பெண்ணுக்கு கொரோனா கண்டறியப்பட்டது. அதை டாக்டர்கள் தீவிர முயற்சி எடுத்து குணமாக்கினார்கள். அப்போது அது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அதன்பின் கேரளாவில் பரவிய கொரோனவை அந்த மாநிலம் சிறப்பாக கையாண்ட பெருமளவு கட்டுப்படுத்தியது. அதையே மற்ற மாநிலங்கள் பின்பற்றவேண்டும் என்று தமிழகம், மராட்டியம், டெல்லி போன்ற மாநிலங்களில் பேசப்பட்டது.
ஆனால், ஆரம்ப காலத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் இப்போது அங்கு அதிகரிக்கத்தொடங்கி உள்ளது.
அந்த மாநிலத்தில் இன்று(சனிக்கிழமை) ஒரே நாளில் 6, 293 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 158 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்தாலும் அங்கு குணமடைவோர் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்து வருகிறது.
அங்கு கொரோனாவில் இருந்து இன்று மட்டும் 4, 749 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 36 ஆயிரத்து 814 ஆக அதிகரித்துள்ளது.
29 பேர் சாவு
தற்போது 60,396 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரளாவில் இன்று மட்டும் 29 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை
2 ஆயிரத்து 786 ஆக அதிகரித்துள்ளது.
மராட்டியம்
இந்தியாவில் கொரோனா பரவலில் முதல் இடத்தில் மராட்டிய மாநிலம் இருந்தது. தொடக்கத்தில் தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அம்மாநிலத்தில் கொரோனா தொற்று பரவும் வேகம் பெருமளவு குறைந்து வருகிறது.
அந்த மாநிலத்தில் இன்று 3,940 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
இதுவரை மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 92 ஆயிரத்து 707 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 3,119 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து
கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 17 லட்சத்து 81 ஆயிரத்து 841 ஆக அதிகரித்துள்ளது.
இந்த மாநிலத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 74 பேர் உயிரிழந்தனர். இவர்களையும் சேர்த்து இங்கு கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 648 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது மராட்டிய மாநிலத்தில் 61,095 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.