இந்தியாவில் ஒரே நாளில் 24,337 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 24,337 people in one day in India
21/12/2020
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 24,337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனாவின் பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது. இந்திய கொரோனா நிரவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 24,337 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா தாக்கியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 55 ஆயிரத்து 560 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 333 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இந்தியாவில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்து 810 ஆக உயர்ந்துள்ளது.
டிஸ்சார்ஜ்
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 25,709 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 96 லட்சத்து 6 ஆயிரத்து111 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது இந்தியாவில் 3 லட்சத்து 3 ஆயிரத்து 639 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேற்கண்ட தகவலைகளை மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.