June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

சனி பெயர்ச்சி பலன்கள் – கடகம்

1 min read

Sani perchi palangal – Kadagam- kaliyur Narayanan

25-12-2020

உங்கள் ராசிக்கு சந்திரன் ஆட்சி நாயகன் என்பதால் நீங்கள் எதையும் சிந்தித்து செயல்படுபவராக இருப்பீர்கள். இக்கட்டான நிலையில் உங்கள் மூளையை பயன்படுத்தி சிறப்பான முடிவை எடுப்பீர்கள். சாமர்த்தியமாக பேசும் திறமை பெற்றவர்கள். பிறருக்கு அறிவுரை கூறும் அளவுக்கு உங்களின் திறமை பளிச்சிடும். நீங்கள் தன்னம்பிக்கை உடையவராக இருப்பீர்கள். உங்கள் குடும்பத்தாரிடம் அளவுக்கு ஆதிகமாக பாசம் வைத்திருப்பீர்கள். நீங்கள் சாமர்த்தியமாக பேசும் திறமை படைத்தவர்கள். அதேநேரம் உங்கள் கையில் பணம் தங்காது. எவ்வளவு பணம் வந்தாலும் அதை ஒரு நொடியில் செலவளித்து விடுவீர்கள். எனவே கிடைக்கும் வருமானத்தை கையில் வைத்திருக்காமல் வங்கி கணக்கில் போட்டு வைக்கவும். அல்லது நகை, மனை போற்றவற்றில் முதலீடு செய்யவும். உங்கள் ராசிக்கு புதன் நட்பு கிரகமாக விளங்குவதாலும், குரு உச்சம் பெற்று இருப்பதாலும் இந்த ராசியில் பலர் சிறந்த கல்வியாளராகவும் உயர்பதவி வகிப்பவராகவும் இருப்பர். வேலையில் உங்கள் திறமையை பலரும் போற்றும் வண்ணம் இருக்கும். பிறந்த ஜாதகத்தல் புதன், சந்திரன், குரு சாதகமாக இருக்குமானால் அவர்கள் மிக உயர்ந்த நிலைக்குச் செல்வார்கள்.
இதுவரை சனிபகவான் உங்கள் ராசிக்கு 6&ம் இடத்தில் இருந்தார். இது மிக சிறப்பான இடம். அவரால் நீங்கள் எண்ணற்ற நன்மைகளை பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக உங்கள் முயற்சிகளில் வெற்றி கண்டிருப்பீர்கள். உங்கள் திறமை மேம்பட்டு இருக்கும். உங்கள் வல்லமை& யால் தொழிலில் முன்னேற்றம் கண்டிருப்பீர்கள். பொருளாதார வளம் அதிகரித்திருக்கும். இதனால் குடும்பத்தில் தேவைகள் பூர்த்தியாகிருக்கும். ஆடம்பர வாழ்க்கைக்கு உங்களை சனிபகவான் அழைத்து சென்றிருக்கலாம். ஒருவேளை நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை கண்டிருக்கா& விட்டால் அதற்கு உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் சாதகமாற்ற இடத்தில் இருந்திருக்கலாம். அல்லது உங்கள் தசாபுத்தி காரணமாக இருக்கலாம்.
இந்த நிலையில் தற்போது சனிபகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் இடமான மகரத்திற்கு மாறுகிறார். இந்த இடத்தில் அவரால் முன்புபோல் உங்களுக்கு நன்மை தர இயலாது. குறிப்பாக குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகளை சந்திக்கலாம். வேலையில் பளுவும், அலைச்சலும் ஏற்படும். சிலர் தொழில் நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டிய நிலை உருவாகலாம். இதற்காக குடும்பத்தை தற்காலிகமாக பிரியவேண்டியது கூட இருக்கும். ஆனாலும் மோசமான நிலைக்கு சனிபகவான் உங்களை செல்ல விடமாட்டார். மேலும் சனிபகவான் வக்கிரம் அடையும் காலத்தில் உங்களுக்கு எந்த கெடுபலனும் ஏற்படாது. மாறாக நன்மைகள் நடக்கவும் வாய்ப்பு உண்டு.
சனிபகவான் மகர ராசியில் இருக்கும் காலத்தில் குருபகவான் இருமுறையும், ராகு&கேது ஒருமுறையும் இடம் பெயருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.