சனி பெயர்ச்சி பலன்கள்- சிம்மம்
1 min read
Saniperchi palangal- simmsm -Kaliyur Narayanan
25-12-2020
உங்கள் ராசியின் ஆட்சி நாயகன் சூரியன் என்பதால் நீங்கள் எத்துறையிலும் பிரகாசமாக விளங்குவீர்கள். மேலும் எதிலும் அறிவுபூர்வமாக செயல்படுவீர்கள். உங்கள் முடிவுக்கு பிறர் கட்டுப்பட்டு போகும் அளவுக்கு உங்கள் திறமை யும், ஆளுமையும் சிறந்து விளங்கும். சாதாரண வேலையில் இருந்தாலும் அங்கே நீங்கள் தனித்துவத்தோடு இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு குரு நட்பு கிரகமாதலால் நீங்கள் அறிவார்ந்து காணப்படுவீர்கள். இறைபக்தி, குருபக்தி நிறைந்த &வராக விளங்குவீர்கள். இந்த ராசியினர் பெரும்பாலும் கம்பீர தோற்றத்துடன் காணப்படுவீர்கள். பலசாலியாகவும் இருப்பீர்கள். சிலர் சகலகலாவல்லவர்களாக இருப்பர். விளையாட்டுப் போடிகளிலும் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக பலர் விளங்குவர்.
சனிபகவான் இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடமான தனுசுராசியில் இருந்தார். அந்த இடத்தில் இருந்து அவர் சுமாரான பலனையே தந்திருப்பார். வாழ்க்கையிலும் தொழிலிலும் இன்னல்களையும் இடையூறுகளையும் சந்தித்து இருக்கலாம். குடும்பத்தில் மனைவி, மக்கள் மத்தியில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு இருக்க& லாம். பிரச்சினைகள் ஏதும் இல்லாவிட்டாலும் எதையாவது நினைத்து மனதை குழப்பிக் &கொண்டு இருந்திருப்பீர்கள். இதனால் எதிலும் அதிகம் ஆர்வம் காட்டாமல் சோம்பேறித்தனம் கூட இருந்திருக்கலாம்.
இதுபோன்ற பிரச்சினைகள் இனி முடிவுக்கு வந்துவிடும். காரணம் சனிபகவான் 6&ம் இடமான மகர ராசிக்கு இடம் பெயர்ந்து செல்வதுதான். ஆறாம் இடம் உங்களுக்கு மிக சிறப்பானது. இங்கே பல்வேறு உன்னத பலனைத் தர இருக்கின்றார். உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும். இதனால் தொழிலில் பல சாதனைகளை படைக்கலாம். வருமானம் அதிகரிக்கும். கடந்த காலத்தில் எதிரிகள், போட்டியாளர்கள் மூலம் தொந்தரவுகளும், தடைகளும் ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் அவை எல்லாம் இனி நடக்காது. பகைகளின் சதி எடுபடாமல் போகும். அதோடு அவர்கள் உங்களிடம் வந்து சரண் அடையும் நிலையும் ஏற்படலாம். குடும்ப நிலைமையும் மேம்படும்.
சனிபகவானோடு அவரது பார்வைகளாலும் நன்மை கிடைக்கும். அதாவது அவரது 10-ம் இடத்துப்பார்வை சிறப்பானதாக அமைந்துள்ளது. அந்த பார்வை உங்கள் ராசிக்கு மூன்றாம் இடமான துலாமில் விழுகிறது. அதன் மூலம் காரிய அனுகூலத்தையும், பொருளாதார வளத்தையும் பெறலாம். தொழிலிலும் சிறப்பு காணலாம்.
இதுதவிர மற்ற முக்கிய கிரகங்களான குரு, ராகு&கேதுவாலும் நன்மை கிடைக்கலாம். அதாவது சனி மகரத்தில் இருக்கும் காலத்தில் குரு 2 முறையும், ராகு-கேது ஒரு முறையும் இடம் மாறுகிறார்கள். அவர்களின் தாக்கமும் எல்லோருக்கும் ஏற்படும். அவர்களாலும் நன்மைகள் கிடைக்கப்பெறலாம்.