சனி பெயர்ச்சி பலன்கள்- துலாம்
1 min read
Saniperchi palngal- Dhulam- Kaliyur Narayanan
25-12-2020
உங்கள்ஆட்சி நாயகன் சுக்கிரன். இதனால் நீங்கள் கலாரசனை மிக்கவராக இருப்பீர்கள். சினிமா, நாடகம், நடனம், வாய்ப்பாட்டு, வித்தை போன்றவற்றில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். அவைகளை ரசிப்பீர்கள். உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் சிறப்பான நிலையில் இருந்தால் நீங்கள் கலைத்துறையில் பிரகாசிப்பீர்கள். உங்கள் ராசிக்கு நட்பு கிரகமான புதன் ஜாதகத்தில் சாதகமாக இருந்தால் அறிவார்ந்த கலைஞனாக புகழ்பெறுவீர்கள். பொதுவாக துலாம் ராசியினர் மனத்தில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர்கள். எந்த பிரச்சினையானலும் நீதியின் பக்கமே நிற்பீர்கள். தங்களுக்கு எது நியாயமாக தெரிகிறதோ அதை சொல்ல தயங்கமாட்டீர்கள். பொதுவாக இந்த ராசியினர் நல்ல குணம் நிறைந்தவராக இருப்பர். பொறுமையும் அறிவுக்கூர்மையும் இவர்களிடம் உண்டு. இவர்களில் பெரும்பாலானோர் நல்ல வளத்துடன் காணப்படுவர். இவர்களது பெயர் சுற்று வட்டாரத்தில் நன்கு பிரபலமாக இருக்கும். இரக்க குணம் நிறைந்தவர்கள். இவர்கள் சுயமாக சம்பாதித்து சொத்துக்கள் வாங்கும் வல்லமை படைத்தவர்கள்.
இதுவரை சனிபகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடமான தனுசுவில் இருந்தார். அப்போது உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளை அள்ளித் தந்திருப்பார். சிறப்பான பொருளாதார வளத்தைக் கண்டிருப்பீர்கள். எதையும் வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றலை பெற்றிருப்பீர்கள். இதனால் காரிய அனுகூலம் பெற்று வளமான வாழ்வை கண்டிருப்பீர்கள். தொழிலில் விருத்தி ஏற்பட்டு இருக்கும். குடும்பம் மகிழ்ச்சிரகமாக இருந்திருக்கும். இப்படி பல்வேறு நன்மைகளை தந்த சனிபகவான் இப்போது நான்காம் இடமான மகர ராசிக்கு செல்கிறார். இந்த இடத்திற்கு அர்த்தாஷ்டம் என்று பெயர். இந்த இடத்தில் அவரால் நன்மை செய்ய முடியாது. அவரால் குடும்பத்தில் சிற்சில குழப்பங்கள் வரலாம். சிலர் தொழில் ரீதியாக குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரிந்து செல்ல வேண்டிய நிலை உருவாகலாம். மனக்குழப்பத்தில் தொழிலைக்கூட சிறப்பாக நடத்த முடியாதாவராகலாம்.
சனிபகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து நன்மை தர இயலாதவராக இருந்தாலும் தன்னுடைய பார்வையால் எண்ணற்ற நன்மைகள் தருவார். அவர்தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்வையிடுவார். அந்த வகையில் அவரது 3&ம் இடத்துப் பார்வையால் நன்மைகள் கிடைக்கும். அந்தப் பார்வை உங்கள் ராசிக்கு 6-ம் இடமான மீனத்தில் விழுகிறது. இதன் மூலம் எடுத்த காரியத்தில் வெற்றியைத் தருவார். இதனால் நல்ல பொருளாதார வளம் கிடைக்கும். தான் இருக்கும் இடத்தில் இருந்து தரும் கெடுபலனை பார்வை மூலம் முறியடித்து நன்மை தருவார். அதாவது குடும்பத்தில் மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் கொடுப்பார். தொழிலிலும் விருத்தியை தருவார். வருமானத்தைப் பெருக்குவார்.
கோச்சார பலனை கணிக்கும்போது மற்ற முக்கிய கிரகங்களான குரு மற்றும் ராகு-கேதுவையும் கணக்கில் கொள்ள வேண்டும். அந்த வகையில் மகரராசியில் சனிபகவான் இருக்கும் காலக்கட்டத்தில் குரு 2 முறையும் ராகு&கேது ஒரு முறையும் பெயர்ச்சி அடைவார்கள்.