2021 புத்தாண்டு பலன்கள் துலாம்
1 min read
2021 New year palangal/ Dhulam / Kaliyur Narayanan
துலாம் ராசி அன்பர்களே! உங்கள் ஆட்சி நாயகன் சுக்கிரன் சாதகமாக அமைந்திருக்கும் சூழ்நிலையில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. மேலும் ஆண்டின் தொடக்கத்தில் சூரியன்,புதன் சாதகமாக இருக்கிறார்கள். இதனால் பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். செல்வாக்கு சிறப்பா இருக்கும்.
குருபகவான் 4-ம் இடமான மகர ராசியில் இருக்கிறார். இந்த இடம் அவ்வளவு சிறப்பானது என்று சொல்ல முடியாது. பொதுவாக குருபகவான் 4-ல் இருக்கும் போது மனஉளச்சலையும், உறவினர்வகையில் வீண்பகையையும் உருவாக்கு -வார் என்பது ஜோதிட வாக்கு. ஆனால் அதை- கண்டு கவலை கொள்ள வேண்டாம். மேலும் இங்கு குரு நீண்டநாட்கள் இருக்க மாட்டார். அவர் 4-4-2021 முதல் 14-9-2021 வரை அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம். குரு 13-11-2021 அன்று முழுபெயர்ச்சி அடைந்து 5-ம் இடமான கும்பராசிக்கு மாறுகிறார். அப்போது அவர் குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சனிபகவான் 4-ம் இடத்தில் இருக்கிறார். இது அவ்வளவு சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. சனிபகவான் வீண்விரோதத்தை கொடுப்பார். ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். இதைக்கண்டு அஞ்ச வேண்டாம். சனி சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 3-ம் இடத்துப் பார்வை சிறப்பாக அமைந்துள்ளது. அதன் மூலம் நன்மை கிடைக்கும். மேலும் சனிபகவான் 21-5-2021 முதல் 9-10-2021 வரை வக்கிரம் அடைகிறார். வக்கிர காலத்தில் அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. சாதகமற்ற கிரகம் செயல்பட முடியாமல் போவது உங்களுக்கு சாதகம்தானே.
ராகு 8-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அவர் உறவினர்கள் வகையில் சிற்சில பிரச்சினைகளை உருவாக்கலாம். உங்கள் முயற்சி -களில் தடைகளையும் உருவாக்கலாம். அலைச்சல் அதிகரிக்கும்.
கேது 2-ம் இடமான விருச்சிக ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. அவரால் நன்மை தர இயலாது.அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. அரசின் வகையில் சிக்கல் வரலாம். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகவும் வாய்ப்பு உண்டு. கேது சாதகமற்ற இடத்தில் இருக்கிறார் என்று கவலைகொள்ள தேவை இல்லை காரணம் அவரது பின்னோக்கிய 4-ம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு 11-இடமான சிம்மத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மேற்கண்ட கிரக நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அலைச்சல் இருக்கும். வெளியில் பலவேறு விஷயங்களில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. இல்லை யென்றால் வீண்மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்.4-4-2021 முதல் 14-9-2021 வரை குரு நற்பலனை தருவார். இதனால் பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.சகோதரிக -ளால் பண உதவி கிடைக்கும். தம்பதியினரிடையே அன்பு பெருகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகள் கிடைக்கும். பெண்களால் மேன்மை கிடைக்கும். நவம்பர் 13-ந் தேதிக்கு பிறகு சாதகமான நிலை உருவாகும். காரிய அனுகூலம் ஏற்படும். புதிய வீடு வாங்கலாம். அல்லது தற்போது இருப்பதை விட வசதியான வீட்டிற்கு குடிபோகலாம். வண்டி வாகனங்கள் வாங்கலாம். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். செல்வாக்கு அதிகரிக்கும். வீட்டில் ஒற்றுமை ஏற்படும். உறவினர்கள் உங்களை நாடி வருவர். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
உத்தியோகம் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்- கள்.அரசுஊழியர்கள் வேலையில் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். உங்கள் பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம்.4-4-2021 முதல் 14-9-2021 வரை குரு உயர்வை தருவார். உத்தியோகம் சிறப்படையும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். இதுவரை இருந்து வந்த பின்தங்கிய நிலை இனி இருக்காது. மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நவம்பர் 13-ந் தேதிக்கு பிறகு வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவர். கோரிக்கைகள் நிறைவேறும். முக்கிய கோரிக்கைகளை வைக்கலாம் சக பெண்ஊழியர் -கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.பொருள் சேரும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.
வியாபாரம் அதிகமாக உழைக்க வேண்டி- யதிருக்கும்.நமக்கு ஏது எதிரி என்று அசட்டையாக இருந்து விடாதீர்கள். வாடிக்கையாளரை அதிக முயர்ச்சி எடுத்து தக்கவைக்க வேண்டியது இருக்கும். புதிய தொழில் தற்போது தொடங்க வேண்டாம். எதையும் ஒன்றுக்கு 10 முறை சிந்தித்து செயல்படுத்துவது நல்லது. இருப்பினும் சனியின் 3-ம் இடத்துப் பார்வை சிறப்பாக அமைந்திருப்பதால் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்படமாட்டீர்கள். நம்பிக்கையுள்ள நண்பர்கள், பெரியோர்கள் ஆலோசனையுடன் தொழிலில் முன்னேற்றம் காணலாம். 4-4-2021 முதல் 14-9-2021 வரை அச்சகம், பத்திரிகை, பப்ளிகேசன், கட்டுமான ஆலோசகர் போன்ற தொழில் நல்ல வளர்ச்சியை அடையும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப் படவில்லை. எது எப்படியானாலும் நவம்பர் 13-ந் தேதிக்கு பிறகு குருவின் பலத்தால் அவை அனைத்தையும் முறிடிக்கும் வல்லமை கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.
கலைஞர்கள்: எதிலும் விடா முயற்சி வேண்டும். எதிர்பார்த்த மதிப்பு பாராட்டு போன்றவை கிடைக்- காமல் போகலாம். உங்கள் திறமை எடுபடாமல் போகலாம்.பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை வசதியுடன் வாழ்வர் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ், பாராட்டு வரும். நவம்பர் 13-ந் தேதிக்கு பிறகு அரசியல்வாதிகள் மேம்பாடு அடைவர். பதவியும், பணமும் கிடைக்கும்.
மாணவர்கள் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. ஜாதகத்தில் நல்ல தசை, புத்தி நடந்தால் கல்வியில் சிறந்து விளங்கலாம். ஆனால் 4-4-2021 முதல் 14-9-2021 வரை விரும்பிய பாடங்களை பெறுவர். ஆசிரியர்களின் அறிவுரை பயன் உள்ளதாக இருக்கும். வெற்றி பெறுவர். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
விவசாயிகள்: அதிகமாக உழைக்க வேண்டும். அதிக முதலீடு பிடிக்கும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம். வழக்கு, விவகாரங்கள் சுமாராக இருக்கும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். 4-4-2021 முதல் 14-9-2021 வரை மஞ்சள், தக்காளி, பழ வகைகள் நல்ல வருவாயை கொடுக்கும்.பால்பண்ணை தொழில், ஆடு,கோழி, பசு, கால்நடை வகையில் நல்ல வருமானத்தை பெறுவர்.
பெண்கள் குடும்பத்தில் உங்களின் அனுகுமுறை கண்டிப்பாக தேவைபடும். வீண் செலவு ஏற்படலாம் கவனமாக இருப்பது புத்திசாலித்தனம்.தோழிகளால் உதவி கிடைக்கும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை குடும்பத்தில் சிறப்பு பெறுவர். குதூகலம் அதிகரிக்கும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். புதிய பதவி தேடி வரும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். நவம்பர்13-ந் தேதிக்கு பிறகு நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவரின் அன்பு கிடைக்கும். உங்கள் மூலம் குடும்பம் சிறக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர்.
உடல் நலம் சிறுசிறு உபாதைகள் வரலாம்.
பரிகாரம்- சந்தர்ப்பம் கிடைக்கும் போது நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். விநாயகரையும், ஆஞ்சநேயûயும் வழிபட்டு வாருங்கள். பாம்பு புற்றுள்ள கோவிலுக்கு சென்று வாருங்கள். துர்க்கைக்கு எலுமிச்சை பழ விளக்கு ஏற்றுங்கள். ராகு காலத்தில் பைரவருக்கு தயிர் சாதம் படைத்து வழிபடலாம். சிவாலயம் சென்று தட்சிணாமூர்த்தியையும் வணங்குங்கள்.