June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

2021 புத்தாண்டு பலன்கள் /கும்பம்

1 min read
2021 New year palangal /Kumbam/ Kaliyur Narayanan

கும்ப ராசி அன்பர்களே! மதிப்பு,மரியாதையும், கவுரவமும் உங்கள் உடன் பிறந்தவை. இதனை விட்டு கொடுக்க மாட்டீர்கள். முக்கிய கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இடத்தில் இருந்தாலும் உங்கள் நட்பு கிறகமான சூரியன் சாதகமாக இருக்கும் நிலையில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. அவரால் செல்வாக்கு அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். மேலும் செவ்வாய் உங்களுக்கு பகை கிரகமாக இருந்தாலும் நன்மை தரும் நிலையில் இருக்கிறார்.அவரால் பக்தி உயர்வு மேம்படும். அனுகூலம் கிடைக்கும். பொருளாதார வளம் மேம்படும்.
குருபகவான் தற்போது உங்கள் ராசிக்கு 12-ம் இடமான மகர ராசியில் இருக்கிறார். இங்கு அவரால் பொருள் விரயம் ஏற்படும். பல்வேறு தொல்லைகள் உருவாகும். மனதில் வருத்தம் உருவாகும். வீண் அலைச்சல் ஏற்படும். இதனால் நீங்கள் மனம் ஒடிந்துபோய்விட வேண்டாம். குரு பகவான் கெடுபலனை செய்யும் போது அது உங்களுக்கு இறுதியில் நன்மையிலேயே முடியும். அவர் 4-4-2021 முதல் 14-9-2021 வரை அதிசாரம் பெற்று உங்கள் ராசியில் இருக்கிறார். அவர் 13-11-2021 அன்று முழு பெயர்ச்சி அடைந்து உங்கள் ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. அவரால் குடும்பத்தில் சிற்சிலபிரச்சினை வரலாம். வேலையில் இடமாற்றம் வர வாய்ப்பு உண்டு. மனக்கவலை ஏற்படும். சுறுசுறுப்பு அற்ற நிலை, இருப்பிட மாற்றம் முதலியன ஏற்படலாம். அதற்காக கவலை கொள்ள தேவை இல்லை காரணம். அப்போது குருவின் அனைத்து பார்வைகளும் சிறப்பாக அமைந்து உள்ளதால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம்.
சனிபகவான் தற்போது 12-ம் இடமான மகர ராசியில் இருக்கிறார். அவரால் பொருளாதார இழப்பு வரலாம். வெளியூர் பயணம் ஏற்படும். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது வரலாம் என்பது ஜோதிட வாக்கு. இதனால் நீங்கள் அஞ்ச வேண்டாம். காரணம் சனி சாதகமற்ற நிலையில் இருந்தாலும் சனியின் 7-ம் இடத்து பார்வை கடகத்தில் விழுகிறது. இது சிறப்பான இடம். இதன் மூலம் அவர் நல்ல பொருளாதார வளத்தை கொடுப்பார். பகைவர்களை எதிர் கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றியை தருவார். உங்கள்ஆற்றல் மேபடும். மகர ராசியில் இருக்கும் சனிபகவான் 21-5-2021 முதல் 9-10-2021 வரை வக்கிரம் அடைகிறார். அவர் வக்கிரம் அடைந்தாலும் மகர ராசிக்குள்ளேயே இருக்கிறார். இந்த காலத்தில் அவர் கெடுபலன் -களை தரமாட்டார்.
ராகு 4-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார். இந்த இடம் ராகுவுக்கு சாதகமானது அல்ல என்பதால் அலைச்சலையும், சிற்சில பிரச்சினையை -யும் உருவாக்கலாம். கேது 10-ம் இடமான விருச்சிகத்தில் இருக்கிறார். இது சிறப்பானது என்று சொல்ல முடியாது. இங்கும் அவர் உடல் உபாதைகளை தரலாம்.
இரண்டு கிரகங்களுமே சாதகமற்ற இடத்தில் இருக்கிறார்கள் என்று கவலைகொள்ள தேவை இல்லை காரணம் ராகுவின் பின்னோக்கிய 11-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 6-ம் இடமான கடகத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன்மூலம் முயற்சிகளில் வெற்றியை தருவார். உங்கள் ஆற்றல் மேம்படும். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள்.
மேற்கண்ட கிரக நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம்.
ஆண்டின் தொடக்கத்தில் தெய்வ அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பிறகு முக்கிய கிரகங்கள் எதுவுமே சாதகமான நிலையில் இல்லை. ராகு குடும்பத்தில் பகையையும் பிரிவையும் ஏற்படுத்து -வார். குழப்பம் நிலவும். மனக்கவலை ஏற்படும். கணவன்- மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். புதிய வீடு, மனை வாங்க அதிக முயற்சி மேற்கொள்ள வேண்டியதிருக்கும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. கவனம் தேவை. 4-4-2021 முதல் 14-9-2021 வரை குருவின் பார்வையால் குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும்.தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். சகோதரிகளால் பொருள் சேரும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர்.உங்களை புரிந்துகொள்ளா -மல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.
உத்தியோகம் வேலைப்பளு இருக்கும். வேலையில் கவனம் தேவை. சிலருக்கு இட மாற்றம் ஏற்படும். .அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும்.4-4-2021 முதல் 14-9-2021 வரை குருவின் பார்வையால் முன்னே -ற்றத்தை காணலாம்.சக பெண்ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.நவம்பர் 13-ந் தேதிக்கு பிறகு திருப்திகரமான நிலை இருக்கும். பல்வேறு அனுகூலங் களை பெறலாம். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். வேலைப்பளு குறையும். உங்கள் திறமை பளிச்சிடும். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். வேலை இன்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்- கும்.விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கப் பெறலாம். சிலர் பக்கத் தொழில் செய்து வருவாயை அதிகரிக்க செய்வர்.
வியாபாரிகள் லாபம் கிடைக்க அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். நமக்கு ஏது எதிரி என்று அசட்டையாக இருந்து விடாதீர்கள். மறைமுக பகைவர்களால் அவ்வப்போது இடையூறு -கள் வரலாம்.புதிய தொழில் தொடங்க அதிக பணம் போடவேண்டாம். பணமுதலீட்டைவிட அறிவு மூதலீட்டை போட்டு தொழில் ஆரம்பிக்க வேண்டும். பொருள்விரயம், பணமாயம் போன்றவை நிகழலாம். குடும்ப பிரச்சினையை மறந்து தொழில் செய்து வந்தால் நல்ல முன்னேற்றம் காணலாம். ஆண்டின் தொடக்கத்தில் கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை குருவின் பார்வையால் லாபத்தை காண்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் சாதக பலனை கொடுக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். நவம்பர் 13-ந் தேதிக்கு பிறகு இடையூறை முறியடிப்பீர்கள். குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். அது சிறப்பாக முடியும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை குருவின் பார்வையால் புகழ் பாராட்டு கிடைக்கும். பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் மறையும். மற்றும் அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். அரசியல்வாதிகள்,சமூகநல சேவகர்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்காது. கவுரவத்தை இழக்காவண்ணம் இருப்பர்.
மாணவர்களுக்கு மனதில் தளர்ச்சி ஏற்படும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை சிறப்பான பலனை பெறுவர். நல்ல மதிப்பெண் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறலாம்.
விவசாயிகளுக்கு ஓரளவு மகசூல் கிடைக்கும். அதிகமாக உழைக்க வேண்டிய திருக்கும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை விவசாயம் சிறப்படையும்.பாசிபயறு, மானாவாரிபயிர்கள், துவரை, கொண்டைக்கடலை, சோளம், மஞ்சள், பழவகைகள் நல்ல மகசூலை கொடுக்கும். பசுவின் மூலம் வருவாய் பெறலாம். வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள் குடும்பத்தில் உங்களின் அனுகுமுறை கண்டிப்பாக தேவைபடும். வீண் செலவு ஏற்படலாம் கவனமாக இருப்பது புத்திசாலித்தனம். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.4-4-2021 முதல் 14-9-2021 வரை குரு சுபநிகழ்ச்சியை தருவார். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சாதகமான காற்று வீசும். வேலை -யில் ஆர்வம் பிறக்கும்.நவம்பர் 13-ந் தேதிக்குபிறகு குருவின் பார்வையால் குதூகலமான பலனை கொடுபார். கணவரின் அன்பு கிடைக்கும். உங்கள் மூலம் குடும்பம் சிறக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சியை காண்பீர்கள். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.
உடல் நலம் சுமாராக இருக்கும். கேதுவால் உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம்.
பரிகாரம்: பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக இல்லாததால் சந்தர்ப்பம் கிடைக்கும்போது நவக்கிரகங்களை வலம் வரவும். சனிக்கிழமை ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள். துர்க்கை அம்மைனை வணங்கி வாருங்கள். வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் பத்திரகாளி அம்மனை வழிபடுங்கள். குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுங்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.