2021 புத்தாண்டு பலன்கள் /மகரம்
1 min read
2021 New year palangal /Magaram / Kaliyur Narayanan
மகர ராசி அன்பர்களே! மனைவி மற்றும் தன் குடும்பத்தினர் மீது அதிக அன்பும், பாசமும் கொண்டவர்கள் நீங்கள். உங்கள் நட்பு கிரகமான கேது சாதகமாக இருக்கும் நிலையில் இந்த ஆண்டு மலர்கிறது. கேது 11-ம் இடமான விருச்சிகத்தில் இருந்து நல்ல வளத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும் கொடுப்பார். குடும்பத்தில் மேன்மையை கொடுப்பார். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றலையும் அவர் கொடுப்பார்.
குரு இப்போது உங்கள் ராசியில் இருக்கிறார் இது சுமாரான நிலையே. குரு1-ம் இடத்தில் இருக்கும் போது கலகம் விரோதம் வரும் என்றும் மந்தநிலை ஏற்படும் என்றும் பொதுவாக கூறப்படுவது உண்டு. ஆனாலும் கவலைபட வேண்டாம். குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளது. குருவின் பார்வைக்கு கோடி நன்மை உண்டு. மேலும் அதிக நாட்கள் அவர் இங்கு இருக்க மாட்டார். அவர் 4-4-2021 முதல் 14-9-2021 வரை அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார்.அவர்13-11-2021 அன்று முழுபெயர்ச்சி அடைந்து 2-ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம். அவரால் உங்களது ஆற்றல் மேம்படும். இதுவரை இருந்த மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும்.பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது.அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.
சனிபகவான் உங்கள் ராசியில் இருக்கிறார். உடல்நலம் பாதிக்கப்படலாம்.நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். உறவினர்கள் வகையில் வீண் மனக்கசப்பு வரலாம். வெளியூர் வாசம் இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. அதைக் கண்டு அஞ்ச வேண்டாம். காரணம் சனிபகவான் தான் நிற்கும் இடத்தில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார். அந்த வகையில் அவரது 3-ம் இடத்துப் பார்வை சிறப்பாக அமைந்துள்ளது. இந்த பார்வையால் அவர் காரிய அனுகூலத்தையும் பொருளாதார வளத்தையும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் தருவார். மேலும் சனிபகவான் 21-5-2021 முதல் 9-10-2021 வரை வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் அவர் கெடு பலன்களை தரமாட்டார்.
ராகு 5-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. அவர் பல்வேறு இன்னல்களையும், இடையூறுகளையும் தரலாம். குழப்பத்தை உருவாக்கலாம். அவர் சிற்சில பிரச்சினையை உருவாக்கலாம். மனதில் ஏனோ இனம் புரியாத வேதனை ஆட்டிப்படைக்கலாம். ஆனால் அவரது பின்னோக்கிய 7-ம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு 11-ம் இடமான விருச்சிகத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன்மூலம் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர்.
மேற்கண்ட கிரக நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம்.
கேதுவின் பலத்தால் பொருளாதார வளத்திற்கு எந்த குறையும் இருக்காது. நல்ல பணப்புழக்கம் ஏற்படும். உங்கள் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பகைவர்களின் தொல்லையில் சிக்கி அலைக்கழிந்தவர்கள்இனி தைரியமாக செயல்படும் ஆற்றல் பெறுவீர்கள். சனிபகவான் சாதகமற்ற இருப்பதால் பெரியோர்களின் ஆலோசனையை அவ்வப்போது கேட்பது நல்லது.
குடும்பத்தில் தேவைகள் பூர்த்தியாகும். குருவின் பார்வையால் சுப நிகழ்ச்சியை தருவார். பணப்புழக்கம் அதிகரிக்கும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை குருவால் ஏற்பட்ட மனக்கவலை ஏற்படும். சுறுசுறுப்பு அற்ற நிலை, இருப்பிட மாற்றம், வீண்அலைச்சல் முதலியன மறையும்.எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். வசதிகள் பெருகும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும் அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். நவம்பர் 13-ந் தேதிக்கு பிறகு குடும்ப நிலைமை மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே உள்ள பிரச்சினை மறையும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.வீட்டில் நிலவிய திருட்டு சம்பவங்கள் மறையும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர்.
உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். மேல்அதிகாரிகளிடம் அனுசரி- த்து போவது நல்லது.4-4-2021 முதல் 14-9-2021 வரை பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வேலைப்பளு குறையும். மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். தனியார் துறையில் இருப்பவர்களு-க்கு சகபெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். பொருள் சேரும். ஆசிரியர்களுக்கு வேலைப்பளு, வீண் மனக்கவலை மறையும். உங்கள் திறமை பளிச்சிடும்.
வியாபாரம் சீராக நடைபெறும். உழைப்புக்கு தகுந்த லாபம் இருக்கும். பகைவர்களின் இடையூறு அவ்வப்போது தலைதூக்கினாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள்.சிலரிடம் வீண் விரோதம் வர வாய்ப்பு உண்டு. எனவே யாரிடமும் எச்சரிக்கையுடன் பேசவும். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். ஆனால் 4-4-2021 முதல் 14-9-2021 வரை பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். நம்பிக்கையுள்ள நண்பர்கள், பெரியோர்கள் ஆலோசனையுடன் தொழிலில் முன்னேற்றம் காணலாம்.வெளியூர் பயணம் சிறப்பை தரும்.அச்சகம், பத்திரிகை, பப்ளிகேசன், கட்டுமான ஆலோசகர் போன்ற தொழில் நல்ல வளர்ச்சியை அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நவம்பர் 13-ந் தேதிக்கு பிறகு முன்னேற்றம் காணலாம். புதியதொழில் ஓரளவு அனுகூலத்தை கொடுக்கும். வியாபாரம் விஷயமாக வெளியூர் பயணம் சென்று வருவர்.தங்கம்,வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.நல்ல வருமானத்தை பெறுவர். பெண்கள் வகையில் அனுகூலம் கிட்டும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். தரகு,கமிஷன் தொழில் தடையின்றி முன்னேறலாம். வீண்விரையம் தடைபடும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தத்திற்காக அதிக முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும்.சமுகநல சேவகர்கள் எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் வளர்ச்சி காண்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை கலைஞர்களுக்கு முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் மறையும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ் பாராட்டு போன்றவை கிடைக்கும் இடர்பாடுகள் மறையும்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. குருவின்பார்வை சாதகமாக இருப்பதால் பின்- தங்கிய நிலைக்கு தள்ளமாட்டீர்கள். 4-4-2021 முதல்14-9-2021 வரை நல்ல முன்னேற்றம் காணலாம். ஆசிரியரின் ஆலோசனை நல்ல வழியை காட்டும். நவம்பர் 13-ந் தேதிக்கு பிறகு கல்வியில் சிறந்த நிலையில் இருப்பர். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும். ஆசிரியர்களின் ஆலோசனையும் கிடைக்க பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.
விவசாயம் புதிய சொத்து முயற்சியின் பேரில் வாங்கலாம்.கோழி,ஆடு வளர்ப்பில் நல்ல வருமானத்தை பெறுவர்.வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். தீர்ப்பு உங்கள் பக்கம் அமையலாம். 4-4-2021 முதல் 14-9-2021 வரை மஞ்சள்,எள்,கரும்பு,கொள்ளு,துவரை, கொண்டைக் கடலை போன்ற பயிர்களில் சிறப்பான மகசூலை பெறலாம்.நவம்பர் 13-ந் தேதிக்கு பிறகு புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான மகசூலை பெறுவர். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு.
பெண்கள் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. குருவின் பார்வையால் சுபநிகழ்ச்சிகள் கைகூடும். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பண வரவு இருக்கும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர்.பிறந்த வீட்டில் இருந்து உதவிகள் வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். விருந்து, விழா என சென்று வருவீர்கள். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சுயதொழிலில் ஈடுபடும் பெண்கள் நல்ல முன்னேற்றம் அடைவர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். புதிய பதவி தேடி வரும்.
உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
பரிகாரம்: சனிபகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றுங்கள். ஆஞ்சநேயர் வழிபாடு உங்கள் வாழ்வில் தடையை அகற்றி முன்னேற்றத்தை கொடுக்கும். பைரவர் வழிபாடு சிறப்பைத் தரும். குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுங்கள்.