June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

2021புத்தாண்டு பலன்கள்/ மீனம்

1 min read
2021 New year palangal/ Meenam / Kaliyur Narayanan

மீன ராசி அன்பர்களே! ஆன்றோர்களின் மீது அன்பு செலுத்துவதில் உங்களுக்கு நிகர் நீங்களே. இந்த ஆண்டு குரு, சனி,ராகு ஆகிய கிரகங்கள் சாதகமான நிலையில் மலர்கிறது. இதனால் இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
குருபகவான் 11-ம் இடமான மகர ராசியில் இருக்கிறார். இது மிகவும் சிறப்பான இடம் ஆகும். அவர் பலவிதத்தில் வெற்றியை தந்து பொருளாதார -த்தில் முன்னேற்றம் காணச்செய்வார். மேலும் அவரின் 7 மற்றும் 9-ம் இடத்துப் பார்வைகள் சிறப்பாக அமைந்துள்ளது. அதன் மூலமும் பல்வேறு நன்மைகள் பெறலாம். ஆனால் அவர் 4-4-2021 முதல் 14-9-2021 வரை அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார். இது சுமாரன இடம். அவர் 13-11-2021 அன்று முழுபெயர்ச்சி அடைந்து 12-ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. அவரால் பொருள் நாசம் ஏற்படும். தொல்லைகள் உருவாகும். மனதில் வருத்தம் உருவாகும். வீண் அலைச்சல் ஏற்படும்
சனிபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் இருக்கிறார். இது சாகதமான இடம். பல்வேறு நன்மைகளை தருவார். அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்த -மும் அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் காணலாம். உங்களுக்கு இது மிகவும் சிறப்பான காலம். உங்கள் வாழ்க்கை செழித்தோங்கும். ஆனால் 21-5-2021 முதல் 9-10-2021 வரை சனிபகவான் வக்கிரத்தில் உள்ளார். சனிபகவான் வக்கிரம் அடைந்தாலும் அதாவது பின்னோக்கி நகர்ந்தாலும் மகர ராசிக்குள்ளேயே இருக்கிறார். இந்த காலக்கட்டத்தில் சனியின் பலம் சற்று குறையும்.
ராகு 3-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார். அவர் காரிய அனுகூலத்தையும், நற்சுகத்தையும், பொருளாதார வளத்தையும் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சியையும்,தொழில்விருத்தியையும் கொடுப்பார்.
கேது 9-ம் இடமான விருச்சிகத்தில் இருக்கிறார். கேதுவால் பொருள் இழப்பை சந்திக்க நேரிடலாம். அதற்காக கவலை கொள்ள வேண்டாம். காரணம் அவரது பின்னோக்கிய 4,7,11-ம் இடத்துப் பார்வைகள் சிறப்பாக அமைந்து உள்ளதால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். இதன்மூலம் தெய்வ அனுகூலம் கிடைக்கும். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம்.
முக்கிய கிரக நிலையை கொண்டு விரிவான பலனை காணலாம்.
சனி, குரு, ராகுவின் பலத்தால் பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். எந்த தடைகளையும் முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். மதிப்பு, மரியாதை சீராக இருக்கும். செல்வாக்கு கூடும்.
குடும்பம்: மேன்மை அடையும்.வசதிகள் பெருகும். தேவைகள் பூர்த்தியாகும்.திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் எளிதில் கைகூடும். குதூகலமும் அதிகரிக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். கணவன்-மனûவி இடையே அன்பு பெருகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். புதிய வீடு கட்டலாம். புத்தாடை-அணிகலன்கள் வாங்கலாம். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். உறவினர்கள் வகையில் இருந்து வந்த பிணக்குகள் மறையும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். பெண்களால் நற்சுகம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர்.
உத்தியோகம்: பதவி உயர்வு காண்பர். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். முக்கிய கோரிக்கைகளை வைக்கலாம்.விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கப் பெறலாம். அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும்.மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சகஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். உங்கள் திறமை பளிச்சிடும். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். ஆசிரியர்கள் பதவி உயர்வு காண்பர். மதிப்பு இருக்கும். முக்கிய கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றிக் கொள்ளவும். வேலை இன்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். சிலர் பக்கத் தொழில் செய்து வருவாயை அதிகரிக்க செய்வர். புதிய வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. 4-4-2021 முதல் 14-9-2021 வரை வேலைப்பளுவும், அலைச்சலும் அதிகமாக இருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். உங்கள் பணியை வேறு நபரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதில் தடை ஏதும் இல்லை.
வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். தடையின்றி முன்னேறலாம். வீண்விரையம் தடைபடும். புதிய தொழில் அனுகூலம் ஏற்படும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். வணிகம் விஷயமாக வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கூட்டாளிகளிடயையே ஒற்றுமை ஏற்படும். பகைவர்களின் தொல்லைகள் குறையும். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். வீண் அலைச்சல் இருக்காது. அப்படியே வெளியூர் பயணம் மேற் கொண்டாலும் அது அனுகூலமான பலனைத் தரும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.அச்சகம், பத்திரிகை, பப்ளிகேசன், கட்டுமான ஆலோசகர் போன்ற தொழில் நல்ல வளர்ச்சியை அடையும்.4-4-2021 முதல் 14-9-2021 வரை அதிகமாக உழைக்க வேண்டியதிருக் -கும். தொழில் விஷயமாக யாரிடமும் வாக்கு வாதத்தை வைத்துக்கொள்ள வேண்டாம். தரகு, கமிஷன் தொழில் முன்னேற்றத்துக்கான வழி கிடைக்கும். பணப் புழக்கம் இருக்கும்.
வக்கீல்கள் தாங்கள் நடத்தும் வழக்குகள் சிறப்பாக இருக்கும். சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
கலைஞர்களுக்கு சககலைஞர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர் உங்கள் முன்னேற்றத்திற்கு பெண்கள் உதவிகரமாக இருப்பர். பொதுநல சேவகர்கள் சமூகத்தில் நல்ல அந்தஸ்க்கு உயர்த்தப் -படுவர்.புதிய பதவி தேடி வரும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி, பொறுப்புகளை பெறலாம். நல்ல வசதியுடன் இருப்பர். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.4-4-2021 முதல் 14-9-2021 வரை கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற சற்றுமுயற்சி எடுக்க வேண்டியது இருக்கும்.
மாணவர்களுக்கு கல்விவளம் பெருகும். மதிப்பு கூடும்.காலர்ஷிப் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும். ஆசிரியர்-களின் ஆலோசனை கிடைக்கும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும்.
விவசாயிகளுக்கு பாசிபயறு, நெல், எள், உளுந்து ,கொள்ளு, துவரை, சோளம், மஞ்சள், கொண்டைக் கடலை பழவகைகள், காய்கறிகள், கீரை வகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான மகசூலை பெறுவர். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு.கால்நடை செல்வம் பெருகும். சிலர் புதிய சொத்து வாங்குவர். பார்க்கலாம். பக்கத்து நிலகாரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். தீர்ப்பு உங்கள் பக்கம் அமையலாம். கைவிட்டுப்போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை கோழி, ஆடு வளர்ப்பில் எதிர்பார்த்த பலனை பெறஇயலாது. பசு வளர்ப்பவர்- கள் அதில் அக்கறைகாட்ட வேண்டியதிருக்கும்
பெண்களுக்கு உற்சாகம் பிறக்கும். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. மனமகிழ்ச்சி அதிகரிக்கும். தோழிகள் உதவிகரமாக இருப்பர். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவு -கள் மறையும்.கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் பெறுவர்.சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். குழந்தைகளால் பெருமை கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர்.உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். 4-4-2021 முதல் 14-9-2021 வரை குடும்ப மேம்பாட்டுக்காக விட்டுக் கொடுத்து போவது நல்லது. இல்லை யென்றால் வீண்மன உளைச்சலு -க்கு ஆளாவீர்கள். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.
உடல் நலம் சிறப்படையும். உபாதைகள் பூரண குணம் அடையும்.
பரிகாரம்: கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். மேலும் துர்க்கை வழியாடு உங்கள் நல்வாழ்வுக்கு துணை நிற்கும். ஏழைகளுக்கு கொள்ளு தானம் செய்யலாம். 4-4-2021 முதல் 14-9-2021 வரை வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபட தவறாதீர்கள். இதனால் நன்மை அதிகரிக்கும். ஆலங்குடி சென்று அங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு 21 தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.