June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

2021புத்தாண்டு பலன்கள்/ ரிஷபம்

1 min read

2021 New year palangal /Taurus/ kaliyur narayanan

ரிஷப ராசி அன்பர்களே! நீங்கள் எதையும் அறிவுபூர்வமாக சிந்திப்பீர்கள். இந்த ஆண்டு உங்கள் நட்பு கிரகமான குரு சாதகமாக நின்று நற்பலன்கள் தரும் நிலையில் உதயமாகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் இருகிறார். இது மிகச்சிறப்பான இடம். மனமகிழ்ச்சி இருக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். இவை அனைத்தும் குருவால் கிடைக்கும் நற்பலன்கள். இது தவிர குருவின் 9-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக இருக்கிறது. இதன் மூலமும் நற்பலன்கள் கிடைக்கும். ஆனால் குருபகவான் அவர் 4-4-2021 முதல் 14-9-2021 வரை அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார். இது சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. இந்த கால-கட்டத்தில் அவரால் முன்பு போல் நல்ல பலன்களை அள்ளித்தர முடியாது. குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 5-ம் இடத்துப்பார்வை மிகச் சிறப்பாக இருக்கிறது. அதன்மூலம் எந்த இடையூறையும் உடைத்தெறிந்து முன்னேற்றம் காணலாம். பிறகு 13-11-2021 அன்று முழு பெயர்ச்சி அடைந்து 10-ம் இடமான கும்பராசிக்கு மாறுகிறார். குரு பொருள் நஷ்டத்தையும், மனசஞ்- சலத்தையும் ஏற்படுத்துவார்.ஆனால் அவரது 5-ம் இடத்துபார்வை உங்களுக்கு சாதகமாக உள்ளது.
ராகு உங்கள் ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் இல்லை. இங்கு அவரால் வீண் அலைச்சல் ஏற்படலாம். உங்கள் முயற்சிக்கு பலன் இல்லாமல் போகலாம். கேது 7-ம் இடத்தில் இருப்பதால் மனைவி வகையில் பிரச்சினையையும், அலைச்சலையும் தரலாம். வீண் மனவேதனை உருவாகலாம். எதிரிகளால் பிரச்சினை வரலாம்.
சனிபகவான் தற்போது 9-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. அவரால் உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம், எதிரிகளின் இடையூறு தலைதூக்கும், பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும் சனிபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது பார்வையால் நன்மை கிடைக்கும். அவர் தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார். அந்த மூன்று பார்வைகளும் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. அதன் மூலம் அவர் பொருளாதார வளத்தையும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் கொடுப்பார். உங்கள் ஆற்றல் மேம்படும். பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். மேலும் 21-5-2021 முதல் 9-10-2021 வரை வக்கிரம் அடைகிறார். அவர் வகிக்ரம் அடைந்தாலும் மகர ராசியிலேதான் இருக்கிறார். எந்த கிரகமும் வக்கிரத்தில் சிக்கும் போது அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் சாதகமற்ற நிலையில் இருக்கும் சனிபகவான் வக்கிரம் அடைந்தால் உங்களுக்கு கெடுபலன்கள் நடக்காது அல்லவா? இன்னும் சொல்லப்போனால் அவரால் நன்மையே கிடைக்கும்.
இனி விரிவான பலனை காணலாம்
மேற்கண்ட நிலையை பார்க்கும்போது குருபகவான் நன்மை தருவார். அதோடு குரு, சனி பார்வைகளும் சிறப்பாக அமைந்துள்ளன. எனவே இந்த ஆண்டு உற்சாகமகா அமையும். உங்கள் முயற்சியில் தடைகள் வந்தாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். மனதில் இருந்த உளைச்சல் மறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள்.
உங்கள் ஆற்றல் மேம்படும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.. கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும். பொருளாதார வளத்தை அதிகரிக்கும். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் வளம் காணலாம். 4-4-2021 முதல் 14-9-2021 வரை தடைகள் பல குறுக்கிட்டாலும் உங்களின் தீவிர முயற்சியால் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். செலவு அதிகரிக்கும். அதற்காக கவலை கொள்ள வேண்டாம். குருவின் 5-ம் இடத்துப் பார்வையால் பண வரவு கூடும். துணிச்சல் பிறகும். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. நவம்பர் 13-ந் தேதிக்கு பிறகு கணவன்-மனைவி ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். உறவினர் வகையிலும் அவ்வளவு அனுகூலம் காணப்படவில்லை. சிலர் மன உழைச்சலுடன் காணப்படுவர்.
உத்தியோகம் சகபெண் ஊழியர்கள் உதவி- கரமாக இருப்பார்கள். தடைகள், திருப்தியின்மை போன்றவை மறையும்.4-4-2021 முதல் 14-9-2021 வரை வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. வேலைப்பளு அதிகமாக இருக்கும். மேல்அதிகாரிகளிடம் சற்று அனுசரித்து போகவும். யாரையும் எளிதில் நம்பி விடாதீர்கள். சிலருக்கு வேலையில் வெறுப்பு வரும். சிலர் வேலையை விட்டுவிடலாமா என்ற எண்ணம் தோன்றும். குருவின் பார்வை பக்கபலமாக இருப்பதால் எந்த விபரீத விளைவும் ஏற்பட்டு விடாது. அதிகமாக போராடியே கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். உங்கள் வேலையை அடுத்தவரிடம் ஒப்படைக்கா -மல் நீங்களே செய்வது நல்லது.
வியாபாரம் வளர்முகமாக இருக்கும். பணப் புழக்கம் அதிகமாக இருக்கும்.சிலர் வியாபாரத்தை விரிவுப்படுத்துவர். வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்கலாம். சேமிப்பு பணத்தை நிரந்தர சேமிப்பு கணக்கில் போடுவது சிறப்பு. நண்பர்கள் வகையில் எதிர்-பார்த்த உதவிகள் கிடைக்கும். தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். வாடிக்கையாளர் மத்தியில் அனுகூலமான போக்கு காணப்படும். பங்குவர்த்தகம் நல்ல லாபத்தை தரும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். மேலும் சனிபகவானின் 10-ம் இடத்துப்பார்வையால் இடையூறுகள் அடியோடு மறையும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். வக்கீல்கள் தொழிலில் சிறந்து விளங்குவர். எழுத்தாளர்கள் நல்ல புகழை காண வாய்ப்புண்டு.4-4-2021 முதல் 14-9-2021 வரை பகைவர்களின் தொல்லைகள் இருக்கும். பண விஷயத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். நவம்பர் 13-ந் தேதிக்கு பிறகு குரு பார்வையால் எடுத்த எல்லாக் காரியங்களையும் சிறப்பாக செய்து முடிக்கலாம். சிற்சில தடைகள் வந்தாலும் அதை தூசிபோல் துடைத்தெறிவீர்கள். செலவுகள் வந்தாலும் அதை ஈடுகட்டும் அளவுக்கு வருமானம் இருக்கத்தான் செய்யும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். சமூகநல சேவகர்கள் எதிர்பார்த்த பலனைக் காணலாம்.பொதுமக்களிடையே நற்பெயர் கிடைக்கும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை கலைஞர்கள் புதிய ஒப்பந்தத்திற்காக அதிக முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும்.
மாணவர்கள்:முன்னேற்ற நிலையில் காணப்படுவர். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.4-4-2021 முதல் 14-9-2021 வரை அசட்டையாக இருந்து விட வேண்டாம். ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடக்கவும்.
விவசாயிகளுக்கு மஞ்சள் மொச்சை, கடலை, நெல் போன்ற தானியங்கள் நல்ல மகசூலை கொடுக்கும். மானாவாரி பயிர்களில் நல்ல வருமானம் காணலாம். பசு வளர்ப்பு மூலம் நல்ல வருமானத்தை காணலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை அதிக முதலீடு பிடிக்கும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம். வழக்கு விவகாரங் -கள் சுமாராகத்தான் இருக்கும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். சமரசபேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பது நல்லது.
பெண்களுக்கு தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். உங்ளால் குடும்பம் சிறக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலைப்பளு குறையும்.விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்கள் முயற்சி செய்தால் வேலை கிடைக்க வாய்ப்யு இருக்கிறது சுயதொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர். 4-4-2021 முதல் 14-9-2021 வரை சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. சிற்சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அண்டை வீட்டாரிடம் வளவள பேச்சு வேண்டாம். அக்கம்பக் -காத்தாரிடம் வீண் வாக்குவாதம் வேண்டாம். ஆடம்பர பொருள் வாங்குவதை தவிர்க்கவும்.
உடல் நலத்தை பொறுத்தவரை சிறப்படையும். கேதுவால் சிற்சில பாதிப்புகள் வந்தாலும் நொடிப்- பொழுதில் மறைந்துவிடும்.
பரிகாரம்- துர்க்கை வழிபாடு நன்மையை தரும். ஆதரவற்ற முதாட்டிகளுக்கும், சன்னியாசி களுக்கும் இயன்ற உதவி செய்யுங்கள். பிள்ளையாரை தினமும் வணங்கி வாருங்கள். மேலும் ஆஞ்சநேயரையும் வழிபடுங்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.