தமிழகத்தில் கொரோன தடுப்பூசி ஒத்திகை நடந்த இடங்கள்
1 min read
Venues for Corona Vaccine Rehearsal in Tamil Nadu
2.1.2021
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்தது.
தடுப்பூசி ஒத்திகை
இந்தியா முழுவதும் இன்று(சனிக்கிழமை) கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்தது. இந்தியாவில், ‘கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு’ தடுப்பூசிகள், மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டன. யாருக்கும் உடல் உபாதைகள் ஏற்படவில்லை. எனவே, பொது மக்கள் பயன்பாட்டுக்கு வர, மத்திய அரசு அனுமதி அளிக்க உள்ளது.
தமிழகத்தில், தடுப்பூசிகளை பதப்படுத்துவது முதல், பொது மக்களுக்கு செலுத்துவது வரை, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நடந்த இடங்கள் விவரம் வருமாறு:
சென்னையில் ராஜிவ் காந்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை; நகர ஆரம்ப சுகாதார நிலையங்கள் ,- சாந்தோம் மற்றும் ஈக்காட்டுதாங்கல்.
நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஊட்டி; குன்னூர் அரசு மருத்துவமனை; நிலக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம்.
திருநெல்வேலியில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை; நகர ஆரம்ப சுகாதார நிலையம், சமாதானபுரம்; ரெட்டியார்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையம்
திருவள்ளூரில் அரசு மருத்துவமனை; பூந்தமல்லி, நேமம் மற்றும் திருமழிசை ஆரம்ப சுகாதார நிலையங்கள்
கோவையில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவமனை; பி.எஸ்.ஜி., இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ், சூலூர் அரசு மருத்துவமனை; எஸ்.எல்.எம்., ஹோம் நகர ஆரம்ப சுகாதார நிலையம்; பூலுவப்பட்டி சமுதாய சுகாதார நல மையம்
மேற்கண்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்தது.
கொரோனா தடுப்பூசி பற்றி தமிழக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, “தடுப்பூசி போட விரும்பும் நபர்கள், தங்களது பெயரை பதிவு செய்ய வேண்டும். அனைத்து வகையான மருந்துகளும் தயார் நிலையில் இருக்கும். ஒரு நாளைக்கு 100 பேருக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இந்தியாவில், ‘கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு’ தடுப்பூசிகள், மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டன. யாருக்கும் உடல் உபாதைகள் ஏற்படவில்லை. எனவே, பொது மக்கள் பயன்பாட்டுக்கு வர, மத்திய அரசு அனுமதி அளிக்க உள்ளது.தமிழகத்தில், தடுப்பூசிகளை பதப்படுத்துவது முதல், பொது மக்களுக்கு செலுத்துவது வரை, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.