June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் இதுவரை 57 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது

1 min read

India has so far vaccinated 57,000 people against corona

3.1.2021

இந்தியாவில் இதுவரை 719 மாவட்டங்களில் 57 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி ஹர்சவர்தன் கூறினார்.

கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முன்னுரிமை அடிப்படையில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
தடுப்பூசி பணியை குறையேதும் இன்றி சரியாக செய்து முடிப்பதற்கு வசதியாக, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என 719 மாவட்டங்களில் 285 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றது.

மகாராஷ்டிரம், கேரளம், குஜராத் மாநிலங்களில் தலா 4 மாவட்டங்களிலும், கா?நாடகம் மற்றும் தமிழகத்தில் தலா 5 மாவட்டங்களிலும், ராஜஸ்தானில் 7 மாவட்டங்களிலும் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது.

இந்தநிலையில் கோவிஷீல்ட், கோவேக்சின் தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து, மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது-:&

96 ஆயிரம் பேர்

வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தேர்தல் வாக்குச்சாவடி நடைமுறை அடிப்படையில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது .

இதுவரை, 719 மாவட்டங்களில் 57 ஆயிரம் பேர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 96 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் முதல் கட்டமாக, ஒரு கோடி மருத்துவப் பணியாளா?கள், 2 கோடி முன்கள பணியாளா?கள் என மொத்தம் 3 கோடி பேர்களுக்கு இலவச தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இரண்டாம் கட்டமாக ஜூலை மாதத்திற்குள் 50 வயதுக்கு மேற்பட்டவா?கள் உள்ளிட்ட 27 கோடி முன்னுரிமை பயனாளர்களுக்கு எவ்வாறு தடுப்பூசி போடுவது என்பது குறித்த விரிவான நடைமுறைகள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் தடுப்பூசி தொடர்பான தவறான வழிகாட்டுதல்களையும் வதந்திகளையும் யாரும் நம்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.