சினிமா தியேட்டர்களில் 100 சதவீதம் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு
1 min read
Government of Tamil Nadu has given 100 percent permission in cinema theaters
4.1.2021
தமிழகத்தில் சினிமா தியேட்டர்களில் 100 பார்வையாளர்களை அனுமதி அளிக்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சினிமா தியேட்டர்கள்
கொரோன பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறபிக்கப்பட்டு உள்ளது. அதன்பின் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் 50 சதவீதம் பார்வையாளர்களையே அனுமதிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால் சினிமா தியேட்டர்களில் ஒரு இருக்கைவிட்டு இன்னொரு இருக்கையில் யாரும் அமரக்கூடாது என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது.
இதனால் போதிய வருமானம் இல்லை. இதன்காரணமாக சினிமா தியேட்டர்கள் இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை. மேலும் முக்கிய நடிகர்கள் நடித்த பலன்கள் வெளியிடப்படால் உள்ளது.
எனவே சினிமா தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. நடிகர்கள், விஜய், சிம்பு உள்பட பல நடிக்கைள், சினிமா தியேட்டர் அதிபர்கள் முதல்&அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். கடந்த 31&ந் தேதி தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்தபோது சினிமா தியேட்டர்கள் பற்றி எந்த தகவலும் இல்லை.
அனுமதி
இந்த நிலையில் தற்போது பார்வையாளர்களின் அனுமதியை 100 சதவீதமாக அதிகரிக்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. எனினும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர், மற்றும் சிம்பு நடித்த ஈஸ்வரன் ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில், திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.