June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 561 யானைகள் சாவு

1 min read

561 elephants have died in Tamil Nadu in the last 6 years

9.1.2021

தமிழகத்தில் 6 ஆண்டுகளில் 561 யானைகள் இறந்துள்ளன.

யானைகள்

வனங்கள் வளம்பெற வனவிலங்குகள் அதிகமாக இருக்க இருக்கவேண்டும். அந்த வகையில் யானைகள் முக்கியமானவை. தற்போது காடுகள் அழிக்கப்பட்டதால் யானைகள் ஊருக்குள் ஊடுவத் தொடங்கி விட்டன. இதனால் அவை அழிவையும் சந்திக்கத் தொடங்கிவிட்டன. ஒரு காலத்தில் வேட்டையாடுதல் மூலம் யானைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது- ஆனால் இப்போது வறட்சி மற்றும் மின்சாரம் தாக்கித்தான் அதிக யானைகள் இறக்கின்றன.

கடந்த 2015-ம் ஆண்டில் 61 யானைகளும், 2016-ம் ஆண்டில் 98 யானைகளும், 2017-ம் ஆண்டில் 125 யானைகளும், 2018-ம் ஆண்டில் 84 யானைகளும் 2019-ம் ஆண்டில் 108 யானைகளும் மேலும் 2020 செப்டம்பர் வரை 85 யானைகளும் என மொத்தம் 561 யானைகள் உயிரிழந்துள்ளன.

மேலும் 2020 ஜூலை வரை 7 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளன. அதில் 3 குட்டி யானைகள் ஆகும்.

மேலும் கடந்த 6 ஆண்டுகளில் ஈரோடு மண்டலத்தில் 167 யானைகளும், கோவை மண்டலத்தில் 134 யானைகளும், தர்மபுரி மண்டலத்தில் 89 யானைகளும் உயிரிழந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனவே யானைகளை பாதுகாக்க அரசு மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.