தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 761 பேர்
1 min readToday’s corona affects 761 people in Tamil Nadu
9.1.2021
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இன்று 761 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா
இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா வேகமாக குறைந்துள்ளது. நேற்று கொரோனா 800க்கும் குறைவானவர்களே கொரோனால் பாதிக்கப்பட்டனர். இன்றும் அதே நிலைதான்.
இன்றை கொரேனா பரவல் பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று( சனிக்கிழமை) 761 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 25 ஆயிரத்து 537 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதித்தவர்களில் இன்று ஒரே நாளில் 882 பேர் சிகிச்சைக்கு பின் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 06 ஆயிரத்து 018 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 7 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 215 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 7,304 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கேரளா
கேரளாவில் இன்று மட்டும் 5,528 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. அந்த மாநிலத்தில் இதுவரை 8,06,603 பேரை கொரோனா தாக்கி உள்ளது. இன்று மட்டும் 22 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து அங்கு கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 3,279 ஆக உயர்ந்துள்ளது. தற்போது அந்த மாநிலத்தில் 64,318 பேர் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.
ஆந்திரா
ஆந்திர மாநிலத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் பதிவாகி வருகிறது. அங்கு இன்று 199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,84,689 ஆகும். ஆந்திராவில் இதுவரை 7,128 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். மாநிலம் முழுவதும் தற்போது 2,607 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 8,74,954 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இந்திய அளவில்
இந்திய அளவில் நேற்று ( வெள்ளிக்கிழமை) புதிதாக 18,222 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,04,31,639 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 228 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,50,798 ஆக உயர்ந்துள்ளது
இந்தியாவில் ஒரே நாளில் 19,253 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து இதுவரை, கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,00,56,651 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனாவுக்கு 2,24,190 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தியாவில் இதுவரை 18 கோடியே 2 லட்சத்து 53 ஆயிரத்து 315 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒருநாளில் மட்டும் 9,16,951 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.