June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 671 ஆக குறைந்தது

1 min read

In Tamil Nadu, the incidence of corona has been reduced to 671

12.1.2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 671 ஆக குறைந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா குறைந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக 700க்கும் கீழே கொரோனா பதிவாகி வருகிறது.
இன்றைய கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-

தமிழகத்தில் இன்று (செய்வாய்க்கிழமை) பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,27,614 ஆக உயர்ந்து உள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 249 ஆய்வகங்கள் மூலமாக 60,563 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை ஒரு கோடியே 49 லட்சத்து 45 ஆயிரத்து 576 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில், 416 பேர் ஆண்கள், 255 பேர் பெண்கள். கொரோனா பாதித்த ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,00,217. பெண்களின் எண்ணிக்கை 3,27,363. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 34.
தமிழகத்தில் கொரோனாவில் இன்று மட்டும் 827 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 8 ஆயிரத்து 571 ஆக உயர்ந்தது.
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 8 பேர் இறந்தனர். இவர்களில் சென்னையில் 5 பேரும் கடலூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் அடங்குவர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,236 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 6,807 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் இன்று 9 பேருக்கும் தென்காசியில் 3 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 7 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாராட்டியம்

மராட்டிய மாநிலத்தில் இன்று 2,936 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19,74,488 ஆக உயர்ந்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 50 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் தொத்த எண்ணிக்கை 50,151 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 3,282 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் இதுவரை 18,71,270 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மராட்டிய மாநிலத்தில் 51,892 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

டெல்லி

டெல்லியில் இன்று 386 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,30,892 ஆகும்.
டெல்லியில் இன்று 16 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 10,707 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் 545 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களையும் சேர்த்து டெல்லி முழுவதும் இதுவரை 6,17,006 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது அங்கு மொத்தம் 3,179 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.