சிறுத்தையை கொன்று சாப்பிட்ட 5 பேர் கைது
1 min read
5 arrested for killing and eating leopard
23.1.2021
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் சிறுத்தையை கொன்று, சமைத்து சாப்பிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிறுத்தை கறி
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், மண்குளம் வனப்பகுதி அருகே முனிப்பாரா என்ற இடம் உள்ளது. அந்த இடத்தில், கடந்த புதன்கிழமை 6 வயதே ஆன ஆண் சிறுத்தை ஒன்று கொல்லப்பட்டு கிடப்பதாகம் அதன் இறைச்சி மற்றும் உடல்பாகங்களை விற்க முயற்சி நடப்பதகாவும் வனதுதுறையினருக்கு தகவல் வந்தது. உடனே வனத்துறையினர் விரைந்து சென்று சோதனை போட்டனர். அப்போது பிகே வினோத் என்பவரது வீட்டில் அங்கு சிறுத்தையின் தோல், பற்கள், எலும்புகள் மற்றும் இறைச்சி கொஞ்சம் சமைத்த நிலையிலும், கொஞ்சம் சமைக்காத நிலையிலும் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் சிறுத்தையை வேட்டையாட பயன்படுத்தப்பட்ட சாதனங்களையும் பறிமுதல் செய்தனர்.
கைது
அவர்களிடம் நடந்த விசாரணையில், சிறுத்தையின் உடல் பாகங்களை விற்பதற்காக, அதனை கொன்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பிகே வினோத், குரியகோஸ்(74), பினு(50), சலி குஞ்சப்பன்(54), வின்சன்ட்(50) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது வனப்பாதுகாப்பு சட்டம் பிரிவு 9,39,44,49,50,51 மற்றும் 57 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் நடந்த விசாரணையில், கடந்த காலங்களிலும் இதேபோல் வன விலங்குகளை கொன்று சாப்பிட்டது தெரியவந்துள்ளது.