இந்தியாவல் ஒரே நாளில் 14,256 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 14,256 people in a single day in India
23.1.2021
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 14,256 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.
சீனாவில் உருவான கொரோனா உலகம் முழுவதும் பரவி மக்களை துயரத்தில் ஆழ்த்தியது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது.
இந்த நிலையில், இந்திய அளவில் கொரோனா பரவல் பற்றிய விவரங்கள் இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:&
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று (வெள்ளிக்கிழமை ) ஒரே நாளில் 14,256 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,06,39,684 ஆக உயர்ந்துள்ளது.
152 பேர் சாவு
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 152 பேர் கொரோனாவுக்கு மரணம் அடைந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,53,184 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் கொரோனாவில் இருந்து 17,130 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,300,838 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,85,662 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் 13,90,592 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.