தமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா; 4 பேர் சாவு
1 min read
Corona for 540 people in Tamil Nadu today; 4 deaths
25.1.2021
தமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உளளது. 4 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இன்றைய கொரோனா நிலவரம் பற்றி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று மட்டும் 540 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்பட்டு உள்ளது. இதில் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 3 பேரும் அடங்குவர். இதில்சென்னையில் மேலும் 157 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 99-வது நாளாக ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 8,34,740 லிருந்து 8,35,280 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 5,04,844 ஆண்கள், 3,30,402 பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் 34 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு 4,813 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் மேலும் 55,710 பேருக்கும், இதுவரை 1,53,86,025 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 55,919 மாதிரிகளும், இதுவரை 1,56,96,304 மாதிரிகளும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த மேலும் 627 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிககை 8 லட்சத்து 18ஆயிரத்து 147ஆக அதிகரித்துள்ளது.
4 பேர் சாவு
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவிற்கு மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 2பேர் தனியார் மருத்துவமனையிலும், 2பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,320 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மராட்டியம்
மராட்டிய மாநிலத்தில் இன்று புதிதாக 1,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,10,948 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 3,080 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,15,344 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 30 பேர் பலியாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50,815 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது வரை 43,561 சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் தகவலை மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.