தமிழகத்தில் கொரோனா பரவல் இன்று 523 ஆக குறைந்தது- சாவு 5
1 min read
Corona distribution in Tamil Nadu has come down to 523 today – death5
26.1.2021
தமிழகத்தில் இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்போர் எண்ணிக்கை 523 ஆக குறைந்தது. இன்று மட்டும் கொரோனாவுக்கு 5 பேர் இறந்தனர்.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா குறைந்து வருகிறது. இன்றைய கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&
தமிழகத்தில் இன்று ( செவ்வாய்க்கிழமை) மட்டும் 523 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா தாக்கியவர்களின் மொத்த எண்ணிக்கை 8,35,803 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 254 ஆய்வகங்கள் மூலம், இன்று மட்டும் 55,815 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில் 307 பேர் ஆண்கள். 216 பேர் பெண்கள். கொரோனா பாதித்த ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,05,151. பெண்களின் எண்ணிக்கை 3,30,618. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 34.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 595 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 18 ஆயிரத்து 742 ஆக உள்ளது.
5 பேர் சாவு
தமிழகத்தில் இன்று மட்டும் 5 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இதில் சென்னையில் 2 பேரும், திருச்சி, செங்கல்பட்டு, கோவை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் இறந்துள்ளனர். இன்று இறந்தவர்களில் 2 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 3 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,325 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 4,736 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் .
நெல்லை
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில் அதிகபட்சமாக சென்னையில் 168 பேருக்கும், கோவையில் 48 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் இன்று 9 பேருக்கும் தென்காசி மாவட்டத்தில் 5 பேருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் 2 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மேற்கண்ட கதவல்களை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.