தி.மு.க., மக்கள் நீதி மய்யம் விருப்ப மனு வாங்கும் தேதி அறிவிப்பு
1 min read
DMK, Makkal Neethi Maiyam Option Petition Purchase Date Announcement
15/2/2021
சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து தி.மு.க.வும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் விருப்ப மனு வாங்கும் தேதியை அறிவித்துள்ளது.
விருப்ப மனு
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது. இதையட்டி அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் வருகிற 24 ந் தேதி முதல் விருப்ப மனு பெற்று அளிக்கலாம் என இன்று (திங்கட்கிழமை) காலை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூட்டாக அறிவித்தனர்.
இந்த நிலையில் இன்று மாலை தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கும் தேதியை கட்சி தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:&
27ந் தேதி
தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல்களில் திமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோர், வருகிற 17-ம் தேதி முதல் 24ந் தேதி வரை விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி, விருப்ப மனு படிவங்களை பெற்றுக்கொள்ளலாம்.
இதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் ரூ. 1000 செலுத்தி விண்ண படிவத்தை பெற்றுள்ள கொள்ளலாம்.
விண்ணப்ப கட்டணமாக ரூ. 25 ஆயிரம், மகளிர் மற்றும் தனிதொகுதிக்கு ரூ. 15 ஆயிரம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த செய்தியில் கூறியுள்ளார். தோழமை கட்சிகளுக்கான தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பத்திருந்தால் விண்ணப்ப கட்டணம் திருப்பி தரப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது:-
நடைபெற இருக்கும் 2021-ஆம் ஆண்டு தமிழக மற்றும் பாண்டிச்சேரி சட்டமன்ற தேர்தல்களிலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் களம் காண்கிறது.
சீரமைப்போம் தமிழகத்தை, புதியதோர் புதுவை செய்வோம் எனும் நமது இருபெரும் கனவுகளை நனவாக்க வேண்டிய சரித்திர முக்கியத்துவம் வய்ந்த தருணம் இது. நமது கட்சி நேர்மையானவர்களின் கூடாரம். திறமையாளர்களின் கோட்டை. துணிச்சல் மிக்கவர்களின் பாசறை. நாம்தான் தமிழகத்தின் பாதுகாப்புப்படை.
இந்தத் தேர்தலில் வென்று மக்களுக்கு நேர்மையான சேவை செய்ய முடியும் எனும் நம்பிக்கை உடையவர்கள் பிப்ரவரி 21-ந்தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம். ஒருவர் எத்தனை தொகுதிகளுக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். தகுதியான வேட்பாளரைப் பரிந்துரைத்தும் விருப்ப மனுக்கள் அனுப்பலாம்.
இந்த முறை ஆன்லைனிலேயே (ஷ்ஷ்ஷ்.னீணீவீணீனீ.நீஷீனீ) சுலபமாக விண்ணப்பிக்கும் வகையில் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்திய அரசியல் கட்சிகளிலேயே ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி விருப்ப மனுக்களைப் பெறும் கட்சி எனும் பெருமையை அடைகிறோம். ஆன்லைனில் விண்ணப்பிக்க வாய்ப்பு இல்லாதவர்கள் தலைமை அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்று தபால் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
கட்சியின் உறுப்பினர் அல்லாதவர்களும் கூட தங்களுக்கு சட்டமன்ற உறுப்பினராவதற்குரிய தகுதியும், திறமையும், மக்கள் பணியில் ஆர்வமும், நேர்மையும் இருக்கிறதென கருதினால் விண்ணப்பிக்கலாம்.
ஒரு தொகுதிக்கு ஒருமுறை விண்ணப்பிக்க 25 ஆயிரம் ரூபாய் நிதி நல்கையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தொகை கட்சியின் தேர்தல் செலவினங்களுக்காகப் பயன்படுத்தப்படும். தங்களது விண்ணப்பம் தேர்வானாலும், ஆகாவிட்டாலும் இத்தொகை திருப்பி அனுப்பப்படமாட்டாது. நேர்மையான ஜனநாயகத்திற்கான உங்கள் பங்களிப்பாக அத்தொகை இருக்கும்.
தனது முதல் தேர்தலிலேயே இத்தனைப் பிரம்மாண்டமான மக்கள் ஆதரவுடனும், நேர்மையான திறமையாளர்கள் புடை சூழவும் தேர்தலை சந்திக்கிற கட்சி எனும் பெருமிதத்துடன் உங்களை வாழ்த்துகிறேன்.
இவ்வாறு கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.