May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 455 ஆக குறைந்தது

1 min read

In Tamil Nadu, the incidence of corona has been reduced to 455

16.2.2021

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 455 என்ற நிலையில் குறைந்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தினமும் 500க்கும் கீழேதான் கொரோனா பரவல் பதிவாகி வருகிறது.
இந்த நிலையில் இன்றைய கொரோனா பரவல் பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&
தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) 455 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,45,575 ஆக அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில் 250 பேர் ஆண்கள். 205 பேர் பெண்கள். இதுவரை கொரோனா பாதித்த மொத்த ஆண்களின் எண்ணிக்கை 5,10,984. மொத்த பெண்களின் எண்ணிக்கை 3,34,556. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உள்ளது.

இன்று மட்டும் 477 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 28 ஆயிரத்து 918 ஆக உள்ளது.

6 பேர் சாவு

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 6 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களில் சென்னை, திருச்சி மாவட்டங்களில் தலா 2 பேரும், திருவள்ளூர், கோவை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் அடங்குவர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,425 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 4,232 பேர் சிகிச்சை பெற்று வருகிறா£ர்கள்.

தமிழகத்தில் 254 ஆய்வகங்கள் மூலமாக, இன்று மட்டும் 50,352 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

தென்காசி

இன்று கொரோனா கண்டறிப்பட்டவர்களில் சென்னையில் அதிகபட்சமாக 143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் 4 பேருக்கும் தென்காசி மாவட்டத்தில் ஒருவருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 5 பேருக்கும் இன்று கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மேற்கண்ட தகவல்கள் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.