தமிழகத்தில் இன்று கொரோனா 451 ஆக குறைந்தது
1 min read
In Tamil Nadu today the corona has dropped to 451
16.2.2021
தமிழகத்தில் இன்றைய கொரோனா 451 ஆக குறைந்துள்ளது.
தமிகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்றை கொரோனா நிலவரம் பற்றிய தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) 451 பேருக்கு கொரோனா இருப்பது கண்டிறியப்பட்டு உள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,46,026 ஆக உயர்ந்துள்ளது.
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில் 269 பேர் ஆண்கள். 182 பேர் பெண்கள். இதுவரை கொரோனா பாதித்த மொத்த ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,11,253. பெண்களின் எண்ணிக்கை 3,34,738. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 35.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று 470 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 29 ஆயிரத்து 388 ஆக உள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 7 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களில் சென்னையில் 2 பேரும், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தூத்துக்குடி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,432 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 4,206 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தென்காசி
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில் சென்னையில் 149 பேரும், கோவையில் 40 பேரும், நெல்லையில் 6 பேரும், தென்காசியில் 2 பேரும் தூத்துக்குடியில் 2 பேரும் அடங்குவர்.
தமிழகத்தில் உள்ள 255 ஆய்வகங்கள் மூலமாக, இன்று மட்டும் 50,800 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை ஒரு கோடியே 68 லட்சத்து 63 ஆயிரத்து 820 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.