June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

“வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை காங்கிரஸ் போராடும்”; பிரியங்கா காந்தி பேச்சு

1 min read

“Congress will fight until agricultural laws are repealed”; Priyanka Gandhi’s speech

7/2/2021

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை காங்கிரஸ் போராடும் என்று- பிரியங்கா காந்தி கூறினார்.

வேளாண் சட்டங்கள்

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர், டெல்லி எல்லைகளில் முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றுடன் இந்த போராட்டம் 102 வது நாளை எட்டியுள்ளது.

திக்ரி, காஜிபூர், சிங்கு எல்லைகளில் விவசாயிகள் தங்களின் டிராக்டர்களையே வீடுகளாக மாற்றி தங்கி, சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்கின்றனர். இதில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த 3 சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்யாத வரையில் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறி வருகின்றனர்.
வருகிற 13ந் தேதி வேளாண் சட்டங்களுக்கு எதிராக மீண்டும் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

பிரியங்கா காந்தி

இந்த நிலையில் மீரட்டில் நடந்த விவசாய சங்கக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:&
வேளாண் சட்டங்களை திரும்ப பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்; விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் இருக்கும். போராட்டம் 100 நாட்களை கடந்தும் சாதகமான நிலை ஏற்படவில்லையே என்று நம்பிக்கை இழக்க வேண்டாம். 100 வாரங்கள் அல்லது 100 மாதங்கள் எடுத்தாலும், இந்த அரசாங்கம் அதன் கறுப்புச் சட்டங்களை திரும்பப் பெறும் வரை நாங்கள் உங்களுடன் இந்த போராட்டத்தை தொடருவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.