June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 567 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 567 people in Tamil Nadu today

7.3.2021

தமிழகத்தில் இன்று மட்டும் 567 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

தமதிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது இன்று ( ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களில் ஆண்கள் 348 பேர். பெண்கள் 219 பேர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,55,121 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று மட்டும் 521 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,38,606 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று ஒருவர் இறந்துள்ளார். அவர் சென்னையைச் சேர்ந்தவர். இவரையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,518 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று மேலும் 251 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உளளது. இவர்களையும் சேர்த்து சென்னையில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,36,978 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு இதுவரை 4,164 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 1,78,46,391 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 55,116 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,78,46,391 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 54,841 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 3,997 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நெல்லை

நெல்லை மாவட்டத்தில் இன்று 11 பேருக்கும் தென்காசி மாவட்டத்தில் 4 பேருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தல் 2 பேருக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது-.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.