எடப்பாடி பழனிசாமியுடன் தே.மு.தி.க. துணை செயலாளர் சுதீஷ் சந்திப்பு
1 min read
NMDB with Edappadi Palanisamy Meeting with Deputy Secretary Sudesh
7.3.2021
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தே.மு.தி.க. துணை செயலாளர் சுதீஷ் தொகுதி பங்கீடு தொடர்பாக சந்தித்து பேசினார்.
அ.தி.மு.க. கூட்டணி
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. திமுக கூட்டணியில் விசிக, மதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, கொமதேக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அதிமுக கூட்டணியில் பாட்டானிமக்கள் கட்சியுடனும் பாரதீய ஜனதாவுடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுவிட்டது. பாரதீய ஜனதாவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
ஆனால் இன்னும் தேமுதிகவுடன் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை. 18 முதல் 20 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்று கூறப்பட்டது. அதோடு டெல்லி மேல்சபையில் ஒரு இடம் ஒதுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தே.மு.தி.க. துணை செயலாளர் சுதீஷ் நேரில் சந்தித்தார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதல் அமைச்சர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு எத்தனை தொகுதி என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அதிமுக – தேமுதிக இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டு விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.