தமிழகத்தில் இன்று 685 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 685 people in Tamil Nadu today
11.3.2021
தமிழகத்தில் இன்று 685 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றி இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:&
தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) 685 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,57,602 ஆக அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் இன்று 257 ஆய்வகங்கள் மூலமாக 65,945 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில், 406 பேர் ஆண்கள். 279 பேர் பெண்கள். இதுவரை கொரோனா பாதித்த மொத்த ஆண்களின் எண்ணிக்கை 5,18,136. மொத்த பெண்களின் எண்ணிக்கை 3,39,431. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 35 ஆகவும் உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 543 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 40 ஆயிரத்து 723 ஆக உள்ளது.
5 பேர் சாவு
கொரோனா தாக்கியவர்களில் இன்று மட்டும் 5 பேர் இறந்துள்ளனர். அதாவது சென்னையில் 3 பேரும், செங்கல்பட்டில் 2 பேரும் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,535 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 4,344 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நெல்லை
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில் சென்னையில் 292 பேர் ஆவர். நெல்லையில் 5 பேருக்கும், தென்காசியில் ஒருவருக்கும், தூத்துக்குடியில் 3 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.