June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

பா. ஜனதா பட்டியல் வெளியாகாத நிலையில் நெல்லையில் நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல்

1 min read

Nainar Nagendran filed his nomination in Nellai as the BJP list was not released

12.3.2021

பாரதீய ஜனதா வேட்பாளர் பட்டியல் இன்
னும் வெளியாகாத நிலையில் நெல்லை தொகுதிக்கு நயினார் நாகேந்திரன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

அ.தி.மு.க.

அ.தி.மு.க. கூட்டணியில் பாரதீய ஜனதாவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அதாவது திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம் விளக்கு, திருக்கோவிலூர், திட்டக்குடி (தனி), கோவை தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, காரைக்குடி, தாராபுரம் (தனி), மதுரை வடக்கு ஆகிய 20 தொகுதிகளில் பாராதீய ஜனதா போட்டியிடுகிறது.

பாரதீய ஜனதா வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன், மாநில பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழு இன்று டெல்லி சென்றுள்ளது.

பாரதீய ஜனதா வேட்பாளர் பட்டியலை மத்தியத் தேர்தல் குழு இன்று இரவோ, நாளையோ வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நயினார் நாகேந்திரன்

வேட்பாளர் பட்டியில் வெளியிடப்படாத நிலையில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் போட்டியிட இன்று (வெள்ளிக்கிழமை) வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இவர் இதற்கு முன்பு அ.தி.மு.க. அமைச்சராக இருந்தார். அதன்பின் பாரதீய ஜனதாவில் சேர்ந்தார். இவர் நெல்லை தொகுதியில் போட்டியிட ஏற்கனவே கேட்டு இருந்தார். தொகுதி பங்கீட்டிலும் நெல்லை தொகுதி பாரதீய ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. எனவே எப்படியும் நெல்லை தொகுதியை தனக்கு ஒதுக்குவார்கள் என்ற நம்பிக்கையில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.