தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு; 800ஐ நெருங்கியது
1 min read
Increase in corona distribution in Tamil Nadu; Closer to 800
14.3.2021
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 759 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தநிலையில் கடந்த சில நாட்களாக சற்று அதிகரித்து வருகிறது.
இன்றைய கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:
தமிழகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 759 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,59,726 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 4 பேர் கொரோனாவுக்க இறந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,547 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 547 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,42,309 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 4,870 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று மேலும் 294 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.