எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் மு.க.ஸ்டாலினுக்கு சம்மன்
1 min read
Edappadi Palanisamy summons MK Stalin in ongoing case
17.3.2021
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.
வழக்கு
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. இதன்படி ஏப். 16ந் தேதி நேரில் ஆஜராக மு.க.ஸ்டாலினுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்அமைச்சர் பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் தொடரப்பட்ட 2 வழக்குகளில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.