June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு; சாவு எண்ணிக்கையும் கூடியது

1 min read

Increase in corona distribution in Tamil Nadu; The death toll is also high

19.3.2021

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 989 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கைம் கூடியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகம் உள்பட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&
தமிழகத்தில் இன்று(வியாழக்கிழமை) 989 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 63 ஆயிரத்து 363 ஆக அதிகரித்துள்ளது.

நெல்லை

சென்னையில் மட்டும் 394 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லையில் 6 பேருக்கும், தென்காசியில் 3 பேருக்கும், தூத்துக்குடியில் 5 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் தற்போது 6, 222 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனா தாக்கியவர்களில் இன்று ஒரே நாளில் 569 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 44 ஆயிரத்து 568 ஆக உயர்ந்துள்ளது.

9 பேர் சாவு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். சென்னை, தஞ்சாவூரில் தலா 3 பேரும், செங்கல்பட்டு, சிவகங்கை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 573 ஆக அதிகரித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.