June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

அ.தி.மு.க.வில் டிக்கெட் கொடுக்காததால் 2 எம்.எல்.ஏ.க்கள் சுயேட்சையாக வேட்புமனுத்தாக்கல்

1 min read

Independent candidature of 2 MLAs for not giving tickets in AIADMK

19.3.2021
அ.தி.மு.க.வில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் முன்னாள் அமைச்சர் உள்பட 2 பேர் சயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

தோப்பு வெங்கடாசலம்
அதிமுகவில் பெருந்துறை தொகுதியில் 2011-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர் தோப்பு வெங்கடாச்சலம். அவருக்கு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சர் பதவி கொடுத்தார். வருவாய்த் துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சராக தோப்பு வெங்கடாச்சலம் பதவி வகித்தார்.
பின்னர் 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதிலும் தோப்பு வெங்கடாச்சலம் வெற்றி பெற்றார். ஆனால், அந்த முறை ஜெயலலிதா அவருக்கு அமைச்சர் வாய்ப்பு வழங்கவில்லை.
அதன் பின்னர் டிசம்பர் மாதம் ஜெயலலிதா மறைவும், 2017 பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அமைச்சரவையும் பங்கேற்றது. அந்த அமைச்சரவையில் ஜெயலலிதா அமைத்த அதே அமைச்சர்கள் பங்கேற்றனர். கூடுதலாக அமைச்சர் செங்கோட்டையன் மட்டும் சேர்க்கப்பட்டார்.

வாய்ப்பு இல்லை

கடந்த 5 ஆண்டுகளாகத் தனக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படும் என தோப்பு வெங்கடாச்சலம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், பெருந்துறை தொகுதியில் போட்டியிட மீண்டும் அதிமுகவில் போட்டியிடுவதாக விருப்ப மனு கொடுத்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பெருந்துறை ஊராட்சி ஒன்றியச் செயலாளர் ஜெயகுமார் என்பவருக்கு நிற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த போது செய்த திட்டப்பணிகளை முன் வைத்து சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக தோப்பு வெங்கடாசலம் அறிவித்திருந்தார்.
அதன்படி பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் கூறும்போது, “ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தும் கொடிவேரி திட்டப்பணிகளை நிறைவேற்ற போராடினேன். தொகுதி மக்கள் விரும்பியதால் சுயேட்சையாக போட்டியிடுகிறேன்” என்று கூறினார்.

சந்திரசேகரன்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் சந்திரசேகரன். இவர் இந்த முறையும் போட்டியிட அதிமுகவில் விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதற்கு பதிலாக சேந்தமங்கலம் தொகுதியில் சந்திரன் என்பவருக்கு அதிமுக வாய்ப்பு அளித்தது.
எம்.எல்.ஏ சந்திரசேகரன், தற்போது அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சந்திரனை எதிர்த்து சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்ததால் அதிமுக தலைமை அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.
இதனை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.