தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,087 ஆக உயர்வு; 9 பேர் சாவு
1 min read
Corona incidence rises to 1,087 in Tamil Nadu; 9 deaths
19.3.2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,087 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 9 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இன்று கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது. கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-&
தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) 1087 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தாக்கியவர்களின் மொத்த எண்ணிக்கை 8,64,450 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 259 ஆய்வகங்கள்மூலம் 73,201 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதுவரை மொத்தம் ஒரு கோடியே 86 லட்சத்து 30 ஆயிரத்து 686 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில் 639 பேர் ஆண்கள், 448 பேர் பெண்கள். கொரோனா பாதித்த மொத்த ஆண்களின் எண்ணிக்கை 5,22,159ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,42,256 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 35 ஆகவும் அதிகரித்து இருக்கிறது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 610 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 45 ஆயிரத்து 178 ஆக உள்ளது.
9 பேர் பலி
தமிழக்தில் இன்று மட்டும் 9 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இதில் சென்னையில் 4 பேரும், செங்கல்பட்டில் 2 பேரும், நீலகிரி, தஞ்சை, திருவள்ளூர் ஆகிய மாவட்டத்தில் தலா ஒருவர் இறந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,582 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 6,690 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் இன்று 9 பேருக்கும், தென்காசியில் 2 பேருக்கும், தூத்துக்குடியில் 4 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேற்கண்ட தகவல்களை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.