தமிழகத்தில் இன்று கொரோனா பதிவு 3,672 ஆக உயர்வு
1 min read
Corona registration in Tamil Nadu today rose to 3,672
5.4.2021
தமிழகத்தில் இன்று 3,672 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தநிலையில் தற்போது கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&
தமிழகத்தில் இன்று( திங்கட்கிழமை) புதிதாக 3,672 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தாக்கியவர்களின் மொத்த எண்ணிக்கை 9,03,479 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 11 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,789 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று மேலும் 1,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,55,074 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 1,842 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,66,913 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 23,777 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவகிறார்கள்.
மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.