உங்கள் ஓட்டை வேறு யாராவது போட்டுவிட்டால்.. என்ன செய்வது?; தேர்தல் ஆணையாளர் விளக்கம்
1 min read
If someone else puts it in your hole .. what to do ?; Election Commissioner Description
5.4.2021
உங்கள் ஓட்டை வேறு யாராவது முன்பே போட்டிருந்தால் என்ன செய்வது என்பதற்கும் வேறு சின்னத்தில் வாக்குப் பதிவானால் என்ன செய்வது?- என்பதற்கு தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்தார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:&
கேள்வி: ஒருவரது வாக்கை வேறொருவர் போட்டிருந்தால் டெண்டர் வாக்கு அளிப்பது எப்படி?
பதில்: வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்ன்று வாக்களிக்கும்போது அவரது வாக்கை ஏற்கெனவே யாராவது போட்டிருந்தால் வாக்காளர் அங்குள்ள வாக்குப்பதிவு அதிகாரியிடம் அதற்குரிய படிவத்தை வாங்கி தனது அடையாளத்தைக் காண்பித்து வாக்களிக்கலாம். அவரது வாக்கை சீலிட்ட கவரில் அதிகாரி பெற்றுக்கொள்வார்.
கேள்வி: நமது வாக்கு வேறு சின்னத்தில் பதிவானதாக விவிபேட் இயந்திரம் காட்டினால் என்ன செய்வது?
வாக்களிக்கும் போது வாக்காளர்கள் வாக்களித்த சின்னம் இல்லாமல் வேறு சின்னத்திற்கு வாக்களிக்கப்பட்டதாக உணர்ந்தால் உடனடியாக புகார் அளித்தால் வாக்குப்பதிவு அதிகாரி புகார் அளித்த வாக்காளரிடம் புகாரைப் பெற்று, வாக்காளரிடம் ஒரு மனுவை கொடுத்து, சத்திய பிரமாணம் போன்று தான் கூறிய தகவல் உண்மைதான் என்ற புகாரை பெறுவார்.
புகாரைப்பெற்றப்பின் வாக்குப்பதிவு அதிகாரி வாக்குச்சாவடி ஏஜெண்டுகளை அழைத்து அவர்கள் முன்பு ஒரு வாக்கை பதிவு செய்வார். இதில் வாக்காளர் தவறான தகவல் அளித்திருந்தது கண்டறியப்பட்டால் அவருக்கு ஆறுமாதம் சிறை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுண்டு.
இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹ§ தெரிவித்தார்.