18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி: பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவக் கூட்டமைப்பு கடிதம்
1 min read
Vaccine for over 18s: Indian Medical Association letter to Prime Minister Modi
6.4.2021
கொரோனா பரவலை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) கடிதம் எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:
கொரோனா தடுப்பூசி
தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆனால், கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால், தடுப்பூசி செலுத்தும் முறையை போர்க்கால அடிப்படையில் வேகப்படுத்த வேண்டும். ஆதலால் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும். 18 வயது நிரம்பிய அனைவரும் இலவசமாக கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ளும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
கொரோனா பரவலை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆனால், கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால், தடுப்பூசி செலுத்தும் முறையை போர்க்கால அடிப்படையில் வேகப்படுத்த வேண்டும். ஆதலால் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும். 18 வயது நிரம்பிய அனைவரும் இலவசமாக கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ளும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தனியார் மருத்துவமனை, சிறிய கிளினிக் போன்றவற்றையும் தீவிரமாக ஈடுபடுத்த வேண்டும். பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் மக்கள் கண்டிப்பாக தடுப்பூசி சான்றிதழை கொண்டு வருவதை கட்டாயமாக்க வேண்டும். தடுப்பூசி செலுத்துவதன் மூலம் தனி நபர்களுக்கு நோய் எதிர்ப்பு அதிகரிப்பதுடன் , நோயின் தீவிரத்தை குறைக்கும் .அனைத்து விதமான மருத்துவர்கள், கிளினிக் நடத்தும் மருத்துவர்களையும் தடுப்பூசி செலுத்துவதில் ஈடுபடுத்தினால், நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
கொரோனா தொற்று சங்கிலியை உடைக்க உயர்ந்து வரும் பாதிப்பை தடுக்க, குறிப்பிட்ட நேரத்திற்கு தொடர்ந்து ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். திரையரங்குகள், கலாசார, மதரீதியான வழிபாடுகள், விளையாட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.