June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

காங்கிரஸ் மூத்த தலைவர் கொரோனாவுக்கு பலி

1 min read

Congress senior leader Died by Corona

22.4.2021

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அசோக்குமார் வாலியா கொரோனா பாதிப்பால் இன்று இறந்தார்.

காங்கிரஸ் தலைவர்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் அசோக்குமார் வாலியா. இவர் ஒரு டாக்டரும் கூட. 72 வயதான இவர் டெல்லியில் ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது அந்த அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார்.
அவர் டெல்லி காங்கிரஸ் அரசில் சுகாதாரத்துறை, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும் செயல்பட்டுள்ளார். இவர் 4 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கொரோனா

கடந்த தேர்தலில் டெல்லி கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட அசோக்குமார் வாலியா ஆம் ஆத்மி வேட்பாளர் எஸ்கே பஹாவிடம் தோல்வியடைந்தார். டாக்டரான வாலியா டெல்லி லட்சுமி நகரில் மருத்துவ கிளினிக் வைத்துள்ளார்.
இதற்கிடையில், அசோக்குமார் வாலியாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக்குமார் வாலியா இன்று( வியாழக்கிழமை) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வாலியாவின் உயிரிழப்பிற்கு பல்வேறு கட்சியினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.