தமிழகத்தில் ஒரே நாளில் 12,652 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 12,652 people in a single day in Tamil Nadu
22/4/2021
தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக நேற்று புதிதாக 12,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&
தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக நேற்று மட்டும் புதிதாக 12,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,37,711 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 59 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 13,317 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று மட்டும் 7,526 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,34,966 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 89,428 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.