இந்தியாவுக்கு துபாய் விமானசேவை ரத்து
1 min read
Dubai cancels flights to India
22/4/2021
இந்தியாவல் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் துபான் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா உள்பட சில நாடுகள் அறிவித்துள்ளன.
மேலும் இங்கிலாந்து, இந்தியாவுக்கான விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக அந்த நாடு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
துபாய்
இந்த நிலையில் துபாய் நாடும் இந்தியாவுடன் விமான போக்குவரத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அதாவது வருகிற 25ந் தேதி முதல் 10 நாட்களுக்கு எமிரேட் விமானங்கள் இயங்காது என்று அரபு அமீரகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கம் குறைந்தால் அதன்பின் இருநாடுகளுக்கான விமான சேவை தொடங்கும் என்று தெரிகிறது.