June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

கர்நாடகாவில் கொரோனா கை மீறி போய்விட்டது ; எடியூரப்பா மன்னிப்பு கேட்டார்

1 min read

In Karnataka the corona has gone out of hand; Edyurappa apologized

22/4/2021
கர்நாடகாவில் கொரோனா நிலைமை கை மீறிபோய்விட்டது என்று வறி பொது மக்களிடம் அந்த மாநில முதல் மந்திரி எடியூரப்பா மன்னிப்பு கேட்டார்.

எடியூரப்பாவுக்கு கொரோனா

கர்நாடகா முதல்மந்திரி எடியூரப்பா இரண்டாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கொரோனாவிலிருந்து மீண்ட அவர் இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

பின்னர் எடியூரப்பா கூறியதாவது:-

மன்னிப்பு

கொரோனா பரவல் கர்நாடக மாநிலத்தில் கைமீறி போய்விட்டது. இதற்காக நான் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு வீட்டில் 3 முதல் 4 பேருக்கு கொரோனாவால் பாதிப்பு ஏற்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல் முகக் கவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்டவைதான் கொரோனாவை எதிர்க்க ஒரே தீர்வு. கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு நாம் வந்துவிட்டோம்.
இனி தேவையில்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். மாஸ்க் அணியாமல் வருவோரிடம் அபராதம் விதித்தால் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லாதீர்கள். சமூகத்தில் உள்ள அனைவரின் நலனுக்காக மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.