June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் ஒரே நாளில் 14,842 பேருக்கு கொரோனா தொற்று; 80 பேர் பலி

1 min read

Corona infection affects 14,842 people in a single day in Tamil Nadu; 80 people were killed

24/4/2021
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 14,842 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தின் கொரோனா நிலவரம் பற்றி இன்று மாலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் இன்று 14,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 66 ஆயிரத்து 329 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் 4,086 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது 1,00,668 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 9,142 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 52 ஆயிரத்து 186 ஆக உயர்ந்துள்ளது.

80 பேர் சாவு

ஆனாலும் கொரோனா தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 80 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 475 ஆக அதிகரித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.