தமிழகத்தில் ஒரே நாளில் 15,659 பேருக்கு கொரோனா; 82 பேர் சாவு
1 min read
Corona for 15,659 people in a single day in Tamil Nadu; 82 deaths
25/4/2021
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 15,659 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. நேற்று மட்டும் கொரோனாவுக்கு 82 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்திலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. தமிழக கொரோனா நிலவரம் பற்றி நேற்று மாலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக நேற்று புதிதாக 15,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,81,988 ஆக அதிகரித்துள்ளது.
82 பேர் சாவு
தமிழகத்தில் நேற்று மட்டும் 82 பேர் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 13,557 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று மட்டும் 11,065 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,63,251 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 1,05,180 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில்..
சென்னையில் நேற்று மட்டும் 4,206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.