இந்தியாவில் கொரோனா ஒருநாள் பாதிப்பு 3.50 லட்சத்தை நெருங்கியது
1 min read
The one-day impact of corona in India is close to 3.50 lakhs
26.4.2021
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.50 லட்சத்தை நெருங்கியது.
வேகமெடுக்கும் கொரோனா
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகம் எடுத்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
நேற்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் அதாவது ஒரே நாளில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 691 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 69 லட்சத்து 60 ஆயிரத்து 172 பேராக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் இதுவரை இல்லாத அளவாக நேற்று முன்தினம் 2,767 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 92 ஆயிரத்து 311- ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரத்து 113- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 40 லட்சத்து 85 ஆயிரத்து 110 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 82 ஆயிரமாக உள்ளது.
மேற்கண்ட தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.