June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் ஒரே நாளில் 28,978 பேருக்கு கொரோனா; 232 பேர் பலி

1 min read

Corona for 28,978 people in a single day in Tamil Nadu; 232 killed

10/5/2021
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 28,978 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 232 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இன்றைய கொரோனா நிலவரம் பற்றி மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,09,237 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 7,149 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 232 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 15,880 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 20,904 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 12,40,968 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 1,52,389 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேற்கண்ட தகவல்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.