June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தவறு செய்தால் அமைச்சர்கள் பதவி நீக்கம்: மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை

1 min read

Ministers sacked if they make a mistake: PM Stalin’s warning

தவறு செய்தால் அமைச்சர்கள் பதவி நீக்கம்: மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை
10/5/2021

அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

பொதுவாக அதிகாரிகள் தவறு செய்தால் அவர்கள் மீது ஆட்சியாளர்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே ஆட்சியாளர்கள் தூய்மையை கடை பிடிக்க வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்க்கமாக உள்ளார். அதாவது அமைச்சர்கள் யாரும் சிறிது கூட தங்கள் துறையில் தவறு செய்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். தவறு செய்யும் அமைச்சர்கள் உடனடியாக பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது இதனை வெளிப்படுத்தினார். அமைச்சரவை கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

அமைச்சர்கள் தங்கள் துறையில் ஏதேனும் தவறு செய்தால், உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள். அமைச்சர்களின் உதவியாளர்கள் நியமனம் உள்பட அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். தொகுதிக்குள் ஏதேனும் பிரச்சினை இருந்தால் நேரடியாக தன்னிடம் முறையிட வேண்டும்.

தங்கள் துறையின் நியமனங்கள் மற்றும் பணி மாறுதல்கள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற வேண்டும். பல எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பில்லாத நிலையில், நீங்கள் அமைச்சர்களாக இருக்கிறீர்கள். எனவே பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

புள்ளி விவரங்கள்

10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லாத நிலையில், மிகச் சிறப்பாக செயல்பட்டு, அவர்களது அங்கீகாரத்தைப் பெற வேண்டும். அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த புள்ளி விவரங்களை நன்கு அறிந்து வைத்துக் கொள்ளவும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.